Thudakkam

துடக்கம் (M) – பெயரைப் பார்த்த உடனேயே புரிந்து கொண்டிருக்க வேண்டும். பாதிப் படம் பார்க்கும் வரை அது மோகன்லாலின் மகள் திரைப்படம் என எனக்கு உறைக்கவில்லை. மோகன்லாலின் திரைப்படம் என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஹீரோ இத்தனை தாமதமாக வருவது இந்தப் படமாகத்தான் இருக்கும் என்று நானாகவே மனதிற்குள் நினைத்துக் கொண்டு, இதோ மோகன்லால் வந்து விடுவார், இதோ கீரிக்கும் பாம்புக்கும் சண்டை வந்துவிடும் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.

Spoiler ahead.

படத்தில் கதாநாயகி காணாமல் போய் பத்திரமாக வீட்டுக்கு வந்து விட, என்ன எழவுடா இது திரைக்கதை என்று எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தால், யூ அவேக் என்று யாரோ ஹை டெசிபிலில் காதில் கத்த, எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் அதிர்ச்சியில் கண் முழித்துப் பார்த்தால், ஹாஃப் ஒயிட்டில் மோகன்லால் ஏதோ எந்திரி என்று சொல்லிக் கொண்டிருந்தார். அடடா மோகன்லால் வந்துவிட்டார் என்று பார்த்தால் அடுத்த 20 நிமிடத்தில் படம் முடிந்து விட்டது‌ என்ன கொடுமை பண்ணி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். விஸ்மயா மோகன்லாலின் முதல் திரைப்படம் என்பதற்காக துடக்கம் என்று வைத்திருக்கிறார்கள் போல‌ அதற்காக இப்படித் தற்காப்புக் கலையெல்லாம் சொல்லித் தருவேன் என்பதெல்லாம் ஒரு கதையா? அதுவும் மோகனாலும் விஸ்மயாவும்! விளங்குமா? ஜெய ஜெய ஹோவில் மனைவியைக் கணவன் மிதிக்கவும், அதை இந்தியாவே கொண்டாடவும், அப்படிக் கொண்டாடுவார்கள் என நினைத்து விட்டார்கள். மிடில.

தூக்கம் வரவில்லை என்றால் பலமாகச் சிபாரிசு செய்கிறேன். பாதிக்குப் பிறகு தூக்கம் உறுதி.

Share

Comments Closed