மகாராஷ்ட்ரா – சிவப்புத் தொப்பி!

கம்யூனிஸ்ட்டுகள் ரொம்ப ஆர்ப்பரிக்கிறார்கள். எப்படா புரட்சி வரும்னு காத்துக்கிட்டு இருந்தவங்க சிவப்புத் தொப்பியைப் பார்த்ததும், இனி இந்தியாவில் எங்கும் சிவப்பே என்று ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இரிக்கி.

வெளிப்படையாக சிவப்பின் எரிச்சலைச் சொல்ல முடியவில்லை என்று ஒரு சிவப்பாளர். (ஐ மீன் காம்ரேட். நோ கேஸ்ட் ப்ளீஸ்.)

தமிழ்நாட்டுல இல்லாத என்னவோ ஒண்ணு இருக்குன்னு ஆன்மிக_அரசியல்வாதி ஒருவர்.

உண்மையான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பங்கிருந்தால் அதில் என்னவோ இருக்கு என்பதே நம் நிலைப்பாடு. மெல்ல வெளிய வரும்.

புரட்சி இப்படி கொப்பளிக்கும்போது இப்படியெல்லாம் பேசலாமா என்று கம்யூனிஸ்ட்டுகளுக்கு உறவாக ஒட்டுமொத்த தேசமே வரும் – பேச மட்டும். ஓட்டுக்கு வராது. அது நமக்கே.

இத்தனை பெரிய போராட்டத்துக்குப் பிறகும் அங்கே காங்கிரஸோ பிஜேபியோ சிவ சேனையோ வெல்லும்.  இப்படி இருக்கும்வரை நாம் பதற்றப்பட ஒன்றுமில்லை.

விவசாயிகளின் நலனுக்குத் தேவையான நியாயமானவற்றை – அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாகவே இருந்தாலும் – அரசு செய்யட்டும். இதில் வெற்றி தோல்வியெல்லாம் இல்லை. சிங்கூரை நினைத்துக்கொள்வோம்.

Share

Comments Closed