Tag Archive for பாஜக

Annamalai on inter caste love marriage

கம்யூனிஸ்டுகள் இப்படி அறிவிப்பு செய்யவும் பலர் கம்யூனிஸ்ட்களை மாமா என்றும் புரோக்கர் என்றும் திட்டித் தீர்ப்பதைப் பார்த்தேன். பலவிதமான கிண்டலான கமெண்ட்டுகள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது மிக முக்கியமான விஷயம். அதை அவர்கள் செய்கிறார்கள் செய்யவில்லை என்பதல்ல பிரச்சினை. கோட்பாட்டு ரீதியாக எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பது முக்கியமானது.

கம்யூனிஸ்டுகளின் அறிவிப்பை பார்த்ததும் என் மனதுக்குள் தோன்றியது, பாஜக இதைச் செய்ய வேண்டும் என்றுதான். கம்யூனிஸ்ட்கள் அறிவிப்பு செய்த பிறகு செய்தாலும் கூட பரவாயில்லை. கட்டாயம் இதை ஓர் அறிவிப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

நேற்றே இதைப்பற்றி எழுத நினைத்தேன். ஆனால் பல பாஜக ஆதரவாளர்கள் கம்யூனிஸ்டுகளைக் கட்டம் கட்டித் திட்டிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் எழுதினால் நான் அவர்களைச் சொல்வதாக நண்பர்கள் தவறாக நினைத்து விடக் கூடும் என்பதால் எழுதவில்லை.

இன்று பார்த்தால் இந்த அறிவிப்பு. இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்து இப்பதிவை எழுதுகிறேன். ஒருவேளை இந்தப் படத்தில் உள்ளது உண்மையல்ல என் நிலைபாடு இதுவே.

கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது. பாஜக இதை அறிவிப்பதோடு முன்னால் நின்று செய்ய வேண்டும். சட்ட ரீதியான உதவிகளையும் தர வேண்டும். உண்மையில் எந்த ஒரு கட்சியும் இதைச் சொல்வதைவிட ஹிந்துத்துவக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக இதைச் செய்வதும் அதன் ஆதரவாளர்கள் இதை வரவேற்பதும் முக்கியமான ஒன்று.

அப்டேட்: அண்ணாமலை சரியாக என்ன சொன்னாரோ அதை இணைத்து இருக்கிறேன். நான் முதலிலேயே சொன்னது போல, அண்ணாமலை சொல்லவில்லை என்றாலும் என் நிலைப்பாடு இதுதான்.

சிலர் அரசியல் கட்சிக்கு இதுவா வேலை, வேறு வேலை இருக்கிறது என்கிறார்கள். இப்படிச் சொல்வதே தவறு. அரசியல் கட்சி ஒரு வேலையை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு வர வேண்டும் என்றால் அது அரசியல் கட்சியாக இருக்கவே லாயக்கில்லை. ஓர் அரசியல் கட்சி எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் சரியான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் அது அரசியலுக்குப் பொருந்தாது என்று பொருள்.

கல்யாணம் செய்த பிறகு பிரச்சினை என்றால் வாருங்கள் என்று அண்ணாமலை சொன்னதாகச் சொல்கிறார்கள். இதைச் சொல்ல அண்ணாமலை எதற்கு? வீட்டை எதிர்த்து ஓடிவருபவர்களுக்கு முடிந்தால் உதவ வேண்டும். பெற்றோர்களை அழைத்துச் சொல்வது என்ன நியாயம்?

ஆனால் அண்ணாமலை சொன்னது அது அல்ல.

அண்ணாமலை தெளிவாகவே சொல்கிறார். நாம் அதை நாம் விருப்பம் போல் புரிந்து கொள்கிறோம். அண்ணாமலை சொன்னது கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொன்னதோ அது சரி என்பதையும் அதை பாராட்டும் விதமாகவும்தான். மேலும் அதை பாஜக பலகாலமாக செய்கிறது என்பதையும்தான். அடுத்து, கூடுதலாகப் பெற்றோர்களிடமும் இன்ஸ்பெக்டரிடமும் சொல்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் அதையே முழு முடிவாக அவர் சொல்லவில்லை.

அண்ணாமலை பேசியதின் வீடியோ. Thanks: Thanthi tv

Share

TN Bjp’s worst decision

தமிழ்நாட்டு பாஜகவில் ஒரு விசித்திரமான நோய் உண்டு. தொடர்ந்து பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் ஆதரிப்பவர்களைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாது. அதுவே அதுவரை பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் திட்டிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று பாஜகவை புகழ்ந்து பேச ஆரம்பித்தால் அவர்களை உடனே அரவணைத்துக் கொள்ளும். இது காலம் காலமாக இருக்கும் நோய்.

இந்திய அளவில் இன்னொரு நோய் உண்டு. பாஜகவின் நம்பிக்கை மிகுந்த தலைவராக இருக்கும்போது அவரைப் புறக்கணிப்பார்கள். அதுவே அவர் வெளியேறி தனிக் கட்சி கண்டு வெற்றி பெற்றால் மீண்டும் அவரைத் தலைவராகக் கூட்டிக் கொண்டு வருவார்கள். எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். கல்யாண் சிங் எடியூரப்பா போன்றவர்கள் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மூன்றாவது ஒரு வியாதியும் உண்டு. மற்ற கட்சியில் தலைவராக இருந்தவர்களையே தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராகவும் வர வைப்பார்கள். அவர்களும் தலைவராக இருந்து விட்டு மீண்டும் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவைத் திட்டுவார்கள். திருநாவுக்கரசு நினைவுக்கு வருகிறார்.

இது போன்ற பல வினோதங்களைத் தொடர்ந்து செய்வதால்தான் தமிழ்நாட்டு பாஜகவால் சட்டென ஓர் உயரத்திற்குச் செல்ல முடியாமல் இருக்கிறது. இப்போது நடந்து கொண்டிருப்பது இது எல்லாவற்றையும் தாண்டிய அதலபாதாளமான வீழ்ச்சி. மீட்புக்கு இடமில்லை. இதனால் அண்ணாமலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

Share

2024 Parliament election – vote for BJP

இன்றோடு பிரசாரம் முடிகிறது. நம் கண்ணெதிரே இருக்கும் போட்டியாளர்களில் அண்ணாமலையின் நிழலைத் தொடக்கூட யாரும் இல்லை என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் நிச்சயம் தெரியும். படித்தவர், அறிவாளி, நேர்மையானவர், கண்டிப்பானவர், நிர்வாக ரீதியாகத் திறமையானவர் என்று பல திறமைகள் ஒருங்கே பெற்ற ஒருவர் அரசியலுக்கு வருவது அபூர்வம். அப்படி ஒருவர் வந்தாலும் அவர் மக்களின் ஆதரவைப் பெறுவது இன்னும் அபூர்வம். அவர் வெற்றி பெறாவிட்டால் அது நம் தவறு.

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனையோ தொகுதிகள் நாளைய முதல்வருக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் எந்த ஒரு தொகுதியும் நாளைய பிரதமர் ஒருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றதே இல்லை. கோயமுத்தூருக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கோயமுத்தூர் அண்ணாமலையை நிச்சயம் வெற்றி பெற வைத்து, நாளைய பிரதமர் ஒருவருக்கு முதல் எபி பதவியைக் கொடுத்த பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பாஜகவுக்கு வாக்களிப்பது ஒவ்வொரு தேசியவாதியின் கடமை. அற்பக் காரணங்களுக்காக வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் தேசியத்துக்காக வெட்டியாகப் பேசும் தவறைச் செய்யாமல், பாஜகவுக்கு வாக்களிப்போம். ஊழலற்ற அரசைத் தரும் ஒரே அரசு பாஜகவின் அரசாகவே இருக்கமுடியும் என்பதை நினைவில் வைத்து வாக்களியுங்கள்.

Share

போர் தொழில்

போர் தொழில் – நேற்றுதான் பார்த்தேன். சரத்குமாருக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அது மட்டுமல்ல. அந்தப் படத்தின் அனைத்து காஸ்டிங்குகளுமே தவறானவை. இல்லையென்றால் படம் இன்னும் நன்றாகப் பேசப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். நல்லவேளை இவற்றை எல்லாம் எழுதவில்லை.

இன்று சகோதரர் சரத்குமார் பாஜகவில் இணைந்திருக்கிறார். நல்ல நடிகர். நேற்று கூட போர் தொழில் பார்த்தேன். மிகச் சிறப்பாக நடித்திருந்தார். எனவே see more…

Share

தமிழக வெற்றி கழகம் தோற்றம்

விஜய் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ‘தமிழக வெற்றி கழகம்’. தமிழ்நாடு என்று வைக்கவில்லை. தமிழகம் தமிழ்நாடு என்றொரு அரசியல் சிறிது காலம் சுற்றிக் கொண்டிருந்தது. இனி அது இருக்காது. இவரது அரசியல் கட்சியினால் கிடைத்த முதல் பயன் இது. ஒரே ஒரு பயனும் இதுவாக இல்லாமல் இருக்க வேண்டும்.

திடீரென்று தனது லெட்டர் பேடில் ஜோசப் விஜய் என்று வெளிப்படுத்திக் கொண்டது போல, அரசியலில் இவரது பெயர் விஜய் என்றிருக்குமா ஜோசப் விஜய் என்றிருக்குமா என்று பார்க்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டை ஹிந்து அல்லாத வேற்று மதக்காரர்கள் ஆண்டதில்லை என்றே நினைக்கிறேன். (வேற்று மதக்காரர்களைவிட தீவிர வேற்று மத அபிமானிகள் ஆண்டிருக்கிறார்கள் என்பது தனி.) இவர் வெளிப்படையாக கிறித்துவர் என்று அறிவித்துக்கொண்டு வந்தால் ஆதரவும் எதிர்ப்பும் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்.

ஒரு கிறித்துவர் என்றும், தீவிர முற்போக்காளர் என்றும் தன்னை விஜய் அரசியலில் முன்னிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் இவர் திமுகவுக்கே முதல் போட்டியாளராக இருப்பார். விஜய்யின் திரைப்படங்கள் வெளி வருவதில், விழா நடத்துவதில் இருந்த சிக்கல்களை எல்லாம் வைத்துப் பார்த்தால் நாம் இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

விஜய் வாங்கப் போகும் ஓட்டு சதவீதம் அதிகபட்சம் 4% என்று வைத்துக்கொண்டால், இவர் திமுகவிலிருந்து 2% ஓட்டுகளையும், நாம் தமிழர் கட்சியில் இருந்து 1% ஓட்டுகளையும் பிரிக்கலாம். புதிதாக 1% ஓட்டுகளை வாங்கலாம். அதில் அண்ணாமலைக்குப் போகவேண்டிய 0.5% ஓட்டுகளும் குறையலாம். இது என் கணிப்பு. அல்லது யூகம். சரியாகச் சொன்னால், ஆசை. 2026ல் இந்த நிலை இன்னும் மோசமாகலாம் அல்லது விஜய் முன்னேறலாம்.

ஆனால் விஜய் முன்னேற வாய்ப்புக் குறைவு. ஏன்? இன்று அரசியலில் அண்ணாமலை நிர்ணயம் செய்து வைத்திருக்கும் பென்ச் மார்க். ஒரு கேள்வி கேட்டால், அதற்கு ஆதாரபூர்வமாக, அர்த்தபூர்வமாக பதில் சொல்கிறார் அண்ணாமலை. இனி புதிதாக வரும் அரசியல்வாதிகளிடமும் மக்கள் இதை எதிர்பார்ப்பார்கள். அப்படி பதில் சொல்ல முடியாமல் போகும்போது, எதாவது உளறும்போது, மீம்களும் ட்ரோல்களும் கடுமையாக இருக்கும். அதிலும் திமுகவுக்கு எதிர்த்தரப்பாக விஜய் நின்றால், இந்த மீம்களும் ட்ரோல்களும் இன்னும் தீவிரமாக இருக்கும்.

திமுகவா விஜய்யா என்று வந்தால் அடுத்த பத்து வருடங்களுக்காவது பத்திரிகைகள் திமுகவுக்குத்தான் ஜால்ரா அடிக்கும். விஜய்க்கு இது இன்னொரு பிரச்சினை. பத்திரிகை உலகம் அண்ணாமலை எதிர்ப்புக்கு திமுகவுக்கு ஜால்ரா தட்டி, கூடவே விஜய்யை அண்ணாமலைக்கு எதிராகப் பாராட்டியும் திமுகவுக்கு ஆதரவாகத் திட்டியும் காலத்தை ஓட்டவேண்டும். நல்ல பொழுதுபோக்கு நிச்சயம்.

மாறாக விஜய் ஹிந்து ஆதரவு ஓட்டுகளைக் குறி வைத்து, பாஜக ரக அரசியலைச் செய்தால் என்னாகும்? மிக எளிதாக விஜய்யை முத்திரை குத்தி ஓரம் கட்டிவிடுவார்கள். பாஜகவுக்கே ஹிந்து ஓட்டுகள் கிடைக்காத நிலையில் அதற்கு விஜய் குறி வைக்க காரணமே இல்லை. எனவே விஜய் அந்தப் பாதையில் செல்லவே மாட்டார்.

விஜய் இன்று அவரது திரையுலகப் புகழின் உச்சியில் இருக்கிறார். ஒரு படத்துக்கு சர்வ சாதாரணமாக 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நிலையில், அடுத்த பத்து வருடங்களுக்கு இதில் பெரிய மாற்றம் இருக்கப் போவதில்லை என்னும் நிலையில், விஜய் இப்போதைக்கு நேரடி அரசியலுக்கு வரவே மாட்டார் என்பதே என்னுடைய தீர்மானமாக இருந்தது. ஆனால் கட்சியின் பெயரை அறிவித்து நேரடியாகவே வந்துவிட்டார். இனி திரைப்படமும் நடிக்கப் போவதில்லை என்று கிட்டத்தட்ட அறிவித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்தபிறகு திரைப்படங்களில் நடித்தால் எடுபடாது என்கிற எண்ணத்தை ரஜினியும் கமலும் உடைத்துக் காட்டிவிட்டார்கள். எனவே ஒருவேளை விஜய் கட்சி அறிவித்த பின்பும், அரசியலுக்கு வந்த பின்பும், திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு, இரண்டு வருடங்கள் கழித்து தேர்தல் அரசியலில் இறங்குவது நல்லதல்ல. வைகோ திமுகவைப் பிரிந்தபோது ஏற்பட்ட சலசலப்பில் ஒரு சதவீதம் கூட வாக்காக மாறவில்லை. காரணம், இரண்டு வருடங்கள் கழித்துத் தேர்தல் வந்ததுதான். விஜய்க்கு இப்போது அந்தச் சலசலப்பு கூட இல்லை.

எதிர்பார்க்காத திடீர் மாற்றம் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் நிகழ்ந்தால் ஒழிய, எதுவும் விஜய்க்குச் சாதகமாக நடக்க வாய்ப்புக் குறைவே. அப்படியே திடீர் மாற்றம் ஒன்று நிகழ்ந்தாலும், அங்கே அண்ணாமலையின் இருப்பையும் விஜய் சமாளித்தாகவேண்டும்.

விஜய்க்கு வாழ்த்துகள்.

Share

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?

• ஊழலற்ற நிர்வாகத்துக்காக
• உண்மையான வளர்ச்சிக்காக
• நல்ல சாலைகள் கிடைத்திட
• மழை வெள்ளத்தில் படகில் போகாமல் இருக்க
• எப்போது மின்சாரம் வரும் என்று தேவுடு காக்காமல் இருக்க உரிய இடத்தில் நமக்காகக் குரல் கொடுத்திட
• போலி மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட
• தாஜா அரசியலுக்கு முடிவுரை எழுத
• நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட
• மத்திய அரசின் முக்கியமான திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி தமிழனுக்கும் கிடைத்திட
• தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க
• தமிழ்நாட்டு அரசியலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
• புதிய பாதை, புதிய இலக்கு, புதிய செயல்திட்டம் கொண்ட புதிய தலைமையின் கீழ் தமிழ்நாடு ஒளிர்ந்திட.

ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• மேலே உள்ள அனைத்துக்காகவும்.
• உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காக.
• இனி வரப் போகும் புதிய அரசியலுக்குக் கட்டியம் கூற.
• ஒரு ஜீவன் ஹிந்து என்பதற்காகவே அந்த ஜீவனின் தற்கொலையைப் பற்றி யாரும் வாய் திறக்காமல் அவலத்தைத் தடுப்பதற்காக.
• கோவில்கள் மட்டும் இடிக்கப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்தப்படுவதற்காக.

ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• பாஜகவின் ஓட்டு வங்கி பாஜகவுக்கு மட்டும் வரவேண்டும் என்பதற்காக.
• திமுகவுக்கு உறுதியான எதிர்ப்பு அதிமுகதான் என்று ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை நிலவிய சூழல் இப்போது இல்லை என்பதற்காக. அந்த இடத்தில் பாஜக வந்துவிட்டது என்பதற்காக.
• சில பிரச்சினைகளில் மட்டும் ஒப்புக்காகப் பேசும் அதிமுக பெரும்பான்மையான அரசியல் கருத்துகளில் திமுகவின் கருத்தையே கொண்டிருப்பதற்காக.
• இரண்டாம் இடத்துக்கு பாஜக வரவேண்டும் என்றால் அதிமுக அல்லது திமுகவை பாஜக தாண்டியாக வேண்டும் என்பதற்காக.

இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?

வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம். தனித்துக் களம் காணும் முதல் உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மை பெற்றுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாஜக பெறும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.

பாஜக ஒருவேளை 20% வாக்குகள் பெறுமானால் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கும். இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் நிலவிய களம் மாற்றியமைக்கப்படும். அதற்காக நிச்சயம் நாம் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்.

அண்ணாமலை போன்ற உறுதியான, திறமையான தலைவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒவ்வொரு இந்திய தேசியத் தமிழனின் கடமை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாளை அண்ணாமலை முதல்வராவார். அதற்கான விதை இன்று நாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப் போகும் வாக்குகளே.

மொழி, மதம் போன்றவற்றால் பிரிக்கப் பார்க்கும் பிரிவினைவாதிகளின் கொட்டத்தை அடக்கி, என்றும் தமிழ்நாடு இந்தியாவின் உறுதியான ஒரு அங்கமே என்பதை உறுதிபடச் சொல்வதற்காக பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும். இப்படிப் பேசவேண்டிய இன்னொரு கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தன்னிலை மறந்து பிரிவினைக் கட்சிகளுக்கு வால் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் பாஜகவை ஆதரிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பாஜக தான் போட்டியிடும் இடங்களில் ஒட்டுமொத்த சராசரியாக 12% வாக்குகள் பெறும் என்று நினைக்கிறேன், பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நிஜமான வளர்ச்சிக்கும் உண்மையான மதச்சார்பின்மைக்கும் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

Share

எம்.ஏ. சமூக அறிவியல் பாடமும் பொன்முடியும்

அமைச்சர் பொன்முடி கிளப்பி இருக்கும் பிரச்சினை குறித்து. சமூக அறிவியல் எம் ஏ பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டு புத்தகத்தில் உள்ள சில வரிகள் நிஜமாகவே கொஞ்சம் தீவிரமாகவும் ஒரு சார்பாகவுமே இருக்கின்றன. கொஞ்சம் மட்டும்தான். தெளிவாக சில முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கவேண்டும். அதைவிட முக்கியம், பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களே என்றும் அமைதியை விரும்புகிறவர்களே என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் பெரும்பாலான வெகுஜன முஸ்லிம்களின் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டு, அதை ஆதரிக்கும் தீவிர இஸ்லாமியர்களைப் பற்றித் தனியே பேசி இருக்கவேண்டும். வெகுஜன முஸ்லிம்களும் அடிப்படைவாத முஸ்லிம்களும் வேறு என்ற தெளிவான வேறுபாட்டுடன் பேசி இருக்கவேண்டும். இந்த அடிப்படை நியாயம் இல்லாததால் அதில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகளும் அடிபட்டுப் போகின்றன.

ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது, அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல் என்றால், இங்கே இருக்கும் திக திமுக கம்யூனிஸ முற்போக்குக் கட்சிகள் அதை எப்படி அணுகுகின்றன என்பது எல்லாருக்குமே தெரிந்ததுதான். வாக்கு வங்கிக்காக அவர்கள் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதும் புதியதல்ல. தாஜா அரசியலுக்காகவே அவர்கள் அன்பு செலுத்துகிறார்கள். நாளையே இந்து வாக்கு வங்கி உருவானால் இவர்கள் எப்படி நடக்கப் போகிறார்கள் என்பதையும் இதே வெகுஜன இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் பார்க்கத்தான் போகிறார்கள்.

பாடத்தில் இருந்து ஒரு பத்தியை வாசித்துக் காட்டிய பொன்முடி, (அவரது முழு பேட்டியை நான் பார்க்கவில்லை) அதற்கு முந்தைய பத்தியில் இந்து முன்னணியின் பெயரும் இருப்பதை வாசித்தாரா என்று தெரியவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்தப் பாடத்தை புகுத்தி இருக்கிறது என்றால், ஏன் இந்து முன்னணியின் பெயரையும் பாஜக புகுத்தவேண்டும்? பாஜவைச் சொல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு காரணமே இல்லை! அதுமட்டுமல்ல, சங்பரிவாரம் மசூதியை உடைத்தது என்றும் அதனால் கலவரங்கள் நிகழ்ந்தன என்றும் இப்பாடப் பகுதி சொல்கிறது. அடுத்து, அதில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறது. இதை முற்போக்களர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

ஹிந்துக்களின் தாக்குதல் என்பது பதிலடி என்பது மிக முக்கியமான ஒன்றே. அதைப் பேசுவது ஏன் முக்கியமானதாகிறது என்றால், எந்த ஊடகமும், எந்த முற்போக்காளரும் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்பதால்தான். அதை இந்தப் பாடப் பகுதி தெளிவாகச் சொல்லி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இந்தப் பாடத்திட்டத்தை எழுதியவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டார் என்று பொன்முடி சொல்கிறார். யார் அந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் எனத் தெரியவில்லை. துணைவேந்தர் யார் எனத் தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியவில்லை.

பாடத்திட்டத்தில் ஈவெராவை பெரியார் என்றும் தமிழர் தந்தை என்றும் வைக்கம் வீரர் என்றும், அண்ணாத்துரையை ஆஹோ ஓஹோ என்றும் தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றும், கருணாநிதியை கலைஞர் என்றும் புகுத்தினால்; ஆரியர்கள் பறக்கும் குதிரையில் காற்றில் அவர்களின் தலைமுடி பின்னால் பறக்க படையெடுத்து திராவிடர்களை வேட்டையாடினார்கள் என்ற ஒரு கற்பனைச் சித்திரம் மனதில் பதியும் அளவுக்குப் பாடங்களை எழுதினால்; கண்ணில் படும் கடவுளர் சித்திரங்களை எல்லாம் நீக்கி, கடவுள் வாழ்த்தை நீக்கி, ஹிந்துப் பெயர்களை நீக்கி, புகைப்படங்களில் வரும் ஹிந்து மதச் சின்னங்களை நீக்கி பாடங்களை எழுதினால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தால், அடுத்தவனுக்கு வாய்ப்பு வரும்போது விரல் சூப்பிக் கொண்டிருக்க மாட்டான். நியாயமாகப் பார்த்தால், திராவிட இயக்கங்கள் செய்த பாடத்திட்டத் திணிப்புப் புரட்டுகளுக்கு மத்தியில், இன்று பொன்முடி சொல்லும் பாடத் திட்டம், மிகச் சரியாகச் சொல்லப்படாத ஒன்றாகவே உள்ளதே அன்றி, முழுப் பொய்யாக இல்லை, புரட்டாக இல்லை.

நீங்கள் ஒரு கட்சியாக அரசாக என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதையே உங்களுக்கு மற்றவர்களுக்குச் செய்வார்கள்.

(பின்குறிப்பு: கிடைத்த நான்கு பக்கங்களை மட்டுமே படித்தேன். முழு புத்தகத்தையும் படிக்கவில்லை.)

Share

தேஜஸ்வி சூர்யா – பெங்களூரு படுக்கை ஊழல்

பெங்களூருவில் நடந்த கொரானா நோயாளிகள் மற்றும் மருத்துவமனை தொடர்பான ஊழலை தேஜஸ்வி சூர்யா வெளிப்படுத்தும்போது சொன்ன பெயர்கள் அனைத்தும் இஸ்லாமியர்களின் பெயர்கள். இதை வைத்துக்கொண்டு அங்கே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் இதில் இருக்கும் மத அரசியலைப் பாரீர் என்று ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் அந்தப் பெயர்களை அவர் சொன்னார், அந்தப் பெயர்கள் யாருடையவை, அவை யார் தந்தவை என்பதையெல்லாம் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிந்திப்பார்கள். நடிகர் சித்தார்த் கிடைத்தது இன்னொரு வாய்ப்பு என்று மதச்சார்பின்மை ஒளிவட்டத்துடன் ஒரு பதிவும் போட்டு, அஜ்மல் கஸாப்பையும் விட பின் தங்கிவிட்டதாக ஒரு ட்வீட் செய்துவிட்டார். அதையும் சேர்த்துக்கொண்டு கன்னட ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ஆரம்பித்துவிட்டன – தேஜஸ்வி சூர்யாவின் ஊழல் தோலுரிப்பில் மத அரசியல் என்று.

Youtube link for the interview of Tejasvi Surya https://www.youtube.com/watch?v=7cera26EkDM

இந்நேரம் பார்த்து தேஜஸ்வி சூர்யாவை பேட்டி எடுத்தது இந்தியா டுடே. வழக்கம்போல இந்தியா டுடேவின் நோக்கம் தேஜஸ்வி சூர்யாவிடம் இல்லாத மத அரசியலை, இஸ்லாமிய வெறுப்பை எப்படியாவது வெளியே கொண்டுவந்து அவரை அம்பலப்படுத்துவது. ஆனால் வழக்கம்போல நடந்தது வேறு. தேஜஸ்வி சூர்யா சொன்ன பதில்களில் வாயடைத்துப் போய்விட்டது இந்தியா டுடே. ஒரு கேள்வியையும் தேஜஸ்வி சூர்யா விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். ஏன் அந்த இஸ்லாமியர்ப் பெயர்கள் என்றதற்கு அவர் சொன்ன பதில்தான் இது ஹைலைட். அந்தப் பெயர்ப் பட்டியல் தேஜஸ்ட் சூர்யா தயாரித்ததே அல்ல! மருத்துவமனை தந்தது. அந்தப் பட்டியலை மருத்துவமனைக்குத் தந்தது ஒரு ஏஜென்ஸி. அந்த ஏஜென்ஸி இப்போது காவல்துறை வளையத்துக்குள். இதோடு நின்றிருந்தால் இது அரசியல் பதிலாக மட்டும் போயிருக்கும். அடுத்து என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. நந்தன் நீல்கேனியின் உதவியுடன் இப்போதிருக்கும் வலைத்தளம் மற்றும் ஆப்பை எப்படி உயர்த்தலாம் என்று ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். நந்தன் நீல்கேனி அதற்கென 100 தொழில்நுட்ப உதவியாளர்களை நியமித்து, அந்த ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த பதில்களை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா டுடே அடுத்த கேள்வியை வெட்கமே இல்லாமல் கேட்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமா என்று. இவர்களுக்குத் தேவை பரபரப்பு மட்டுமே. அதற்கான நேர்மையான பதில் அல்ல!

Share