Archive for ஹரன் பிரசன்னா
எஸ்ரா உரை – தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்
ஒரு நேர்காணல், ஒரு பேச்சு
ஒரு நேர்காணல், ஒரு பேச்சு
* நிர்மலா சீதாராமன் – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளை எதிர்கொண்ட விதம் மிக நன்றாக இருந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் முடிந்த அளவு தமிழில் பதில் சொன்னார். அவரது தமிழ் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தாலும், கருத்துகள் சரியாகச் சென்று சேர்வதில் எக்குழப்பமும் இருக்கவில்லை. மிகத் தீர்க்கமாகவே பதில் சொன்னார். பாண்டே குறுக்கே குறுக்கே கேட்கும்போதெல்லாம் பாண்டேவைக் கண்டிக்கத் தவறவில்லை. ‘நீங்க ஒவ்வொண்ணா சொல்லிக்கிட்டே இருப்பீங்க, அதுக்கு ஆம்/இல்லைனு பதில் சொல்லிக்கிட்டே இருக்கணுமா?’ என்ற பதிலில் பாண்டேவே கொஞ்சம் அடக்கித்தான் வாசித்தார் என்று தோன்றியது. சில கேள்விகளுக்கு, பாண்டேவைக் குறை சொல்லும் விதமாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன். ராகுலின் டிவீட் மற்றும் ஓபிஎஸ்ஸின் மோதி பற்றிய கருத்து இரண்டையும் பாண்டே கோட் செய்ததை நிர்மலா சீதாராமன் புரிந்துகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் பாண்டேவையே குறை சொன்னார். ஒரு கட்டத்தில் பாண்டே அப்படியே அதை விட்டுவிட்டார். கேள்வி கேட்கும் ஊடகத்தினரை இப்படி ஒரு கட்டத்துக்குள் இருக்கச் செய்வது தேவைதான் என்றாலும், பாண்டேவுக்கும் இது நிகழ்வது கொஞ்சம் பாவமாகத்தான் உள்ளது. ஏனென்றால், ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என எல்லாரையும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கேள்வி கேட்பது பாண்டே மட்டுமே. மற்ற ஊடகத்தினர் ஹிந்துத்துவர்களுக்கு எதிராக மட்டுமே பொங்குவார்கள். ஆனால் அவர்கள் பட்டியலில் பாண்டேவையும் நினைத்துக்கொண்டுவிட்டார் நிர்மலா சீதாராமன் என நினைக்கிறேன். இதை மட்டும் நிர்மலா சீதாராமன் தவிர்த்திருந்திருக்கலாம்.
நிர்மலா சீதாராமன் எல்லாப் பேட்டிகளிலுமே மிகக் கறாராகப் பேசுகிறார். உள்ளத்தில் உண்மை இல்லாமல் போனால் அது வெற்று அகங்காரமாக ஆகிவிடும். நூலிழையில் நடமாடு வித்தை இது. ஆனால் நிர்மலா சீதாராமன் பேசும்போது அது தன்னம்பிக்கையின், தன் நேர்மையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இந்தப் பேட்டியிலும் அப்படியே. எந்தக் கேள்விக்கும் தயங்கவோ தத்தளிக்கவோ இல்லை. தமிழ்நாட்டின் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வருவார் என நினைத்தேன். ஆனால் அந்தப் பேச்சு கொஞ்சம் தீவிரமடையும் நேரத்தில் சட்டென சுதாரித்துக்கொண்ட மோதி அவரை பாதுகாப்பு அமைச்சராக்கிவிட்டார்! நிர்மலா சீதாராமன் இன்னும் உயரத்தைத் தொடுவார் என நினைக்கிறேன். பார்க்கலாம்.
* புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் பேச்சு, பூணூல் அறுப்புக்கு எதிராக மயிலாப்பூரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியது. திராவிடக் கட்சிகளின், திராவிடக் கொள்கையின் தோல்விகளைப் பற்றியும், பூணூல் அறுப்பு என்பது தரும் வலியை ஒத்த வேதனையை புதிய தமிழகம் கட்சி பல பத்தாண்டுகளாக அனுபவித்து வருகிறது என்பதால் இதைப் புரிந்துகொள்ளமுடிகிறது என்பது பற்றியும் பேசினார். அவரது தனிப்பட்ட வாழ்வில் பிராமணர்கள் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். ஒரு சமூகமாக பிராமணர்கள் செய்ததைவிட பிற சமூகங்களே தலித்துகளுக்கு அதிகம் பிரச்சினைகளைச் செய்திருக்கிறார்கள் என்றும், ஆனால் திராவிடக் கட்சிகள் அச்சமூகங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்றும் சொன்னார்.
இவையெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படுபவைதான். திராவிடத் தரப்பு இதை எளிமையாக எதிர்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணசாமி எத்தனை தூரம் நம்பகத்தனைக்கு உரியவர் என்பது இன்னொரு விஷயம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி இச்சூழ்நிலையில் கிருஷ்ணசாமி பேசி இருப்பது மிகப்பெரிய விஷயம். நிச்சயம் பாராட்டப்படவேண்டியது இது. பூணூல் அறுப்புக்கு ஹிந்துத்துவ இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடியிருக்கவேண்டும். பெரிய அளவில் அதை எதிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது எங்கே பிராமண ஆதரவுக்கட்சி என்ற முத்திரைக்கு மீண்டும் கொண்டு போய்விடுமோ என்று அஞ்சினார்களோ என்னவோ, கண்டித்ததோடு நிறுத்திக்கொண்டார்கள். அந்நிலையில் கிருஷ்ணசாமி இத்தனை தூரம் எதிர்த்திருப்பது மிக முக்கியமானது. மற்ற கட்சிகளெல்லாம் வாய்மூடிக் கிடக்கையில் இவர் மட்டுமே இதனை நியாயமாக எதிர்கொண்டிருக்கிறார். பெரிய விஷயம் இது. கிருஷ்ணசாமியின் பேச்சு சுமாரானதுதான் என்றாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு நன்றி.
கவிஞர் தாமரை கொடுத்த இனிமா
இரண்டு நேர்காணல்கள் – சந்திரலேகா ஐ ஏ எஸ், சிவாஜி சொண்டிநேனி
கௌதமி – ரங்கராஜ் பாண்டே நேர்காணல்
ரங்கராஜ் பாண்டே கௌதமியுடன் நிகழ்த்திய நேர்காணல் (கேள்விக்கு என்ன பதில், தந்தி டிவி) படு திராபையாக இருந்தது. நேர விரயம். கௌதமிக்குப் பேச எந்த விஷயமும் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. கமல் மீது வைத்த பெரிய குற்றச்சாட்டைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தார் கௌதமி. 40 நிமிட நேர்காணலில் கௌதமி சொன்னதில் எதுவுமே முக்கியமானதாக இல்லை. மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்டு வென்றவர் என்ற ஒற்றை (முக்கியமான) விஷயத்தைத் தாண்டி கௌதமி எதையும் சொல்லவில்லை. ஏன் இந்தப் பேட்டி என்பது புரியவில்லை.
இந்தக் கொடுமைகளையெல்லாம் விடப் பெரிய கொடுமை, ரங்கராஜ் பாண்டே கௌதமியை அறிமுகம் செய்தபோது சொன்னது – போராளி. கௌதமி ஏன் போராளி ஆனார் என்பது பாண்டேவுக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். புற்றுநோயை எதிர்கொண்டு வென்றதால் போராளி என்று சொன்னாரா எனத் தெரியவில்லை. நம் ஊரில் போராளி என்பதற்கு நிகழ்கால அர்த்தம் ஒன்று உள்ளது. அப்படி இருக்கும்போது கௌதமியை சர்வ சாதாரணமாக போராளி என்றால் அநியாயம்.
40 நிமிடம் கேட்டது (எம்பி3) பெரிய நேர விரயம்.
இன்னும் நான் கேட்கவேண்டிய பேட்டிகள்: நிர்மலா சீதாராமன் – பாண்டே நேர்காணல், சந்திரலேகா ஐஏஎஸ் – ஹரிஹரன் நேர்காணல்
Sterilite issue
Sterlite issue was there for more than 20 years. When I was working at TAC at my twenties, I remember many slogans, posters and banners against Sterlite in the roads of Tuticorin, but very few bothered them. There was a talk there that whenever any political party or politica person need money, they would start shouting against Sterlite. No need to mention here who might be that! Two friends working at Sterlite were my room-met and they said Sterlite was very stable and smooth in day-to-day operation.
Now again Sterlite issue started in Tuticorin since the management was into expansion it seems. This time it won’t be easy to Sterlite to overcome this as the social media is very powerful as it can spread any riot type news very easily. Eg Jallikkattu. Pro-communist mood!
Not only Sterlite, Even SPIC and TAC were creating pollution, may be now too, if TAC is functioning now. No doubt about this. But the respective managements will come up with statistics showing they are very much well under the permissible limits of the pollution control board and of course Sterlite also would do the same.
I remember one movement was there at Tuticorin in 2000s agitating all the jobs in Sterlite must be given only to Tamils. When there was an agitation to close down the industry itself claiming its hazardous, there was yet other agitation demanding the job in the same company! Irony.
Its better to regulate any company rather than closing it down. ![]()
https://www.thenewsminute.com/article/thousands-come-together-thoothukudi-protest-against-sterlite-copper-plant-78454
7 days break
ஒரு வாரம் ஃபேஸ்புக் பக்கம் வராமல் இருக்கமுடிகிறதா என்று பார்க்கவே ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினேன். அதற்குள் பலர் போன் செய்து… ஒருத்தர்கூடவா போன் செய்து என்னாச்சு எனக் கேட்கமாட்டீர்கள்? கொடுமை. 🙂 யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது உறுதியானதும் இனிமேல் வராமல் இருந்தால் சிக்கல் என்றறிந்து உள்ளே வந்தேன்.
வெளியேறிய முதல் நாள் கைவிரல்கள் தொடுதிரையில் ஃபேஸ்புக் ஐகானையே தேடின. ஆனால் நான் அதில் க்ளியர் டேட்டா செய்திருந்தேன். இரண்டு மூன்று முறை தேடிப் பின்னர் மூளை கண்டுகொண்டது. மொபைலில், 8இன்ச் பேடில் என எல்லாவற்றிலும் ஃபேஸ்புக்கை நீக்கி இருந்தேன். 8இன்ச் பேடில் மட்டும் ஃபேஸ்புக் மெசஞ்சரை நீக்க மறந்திருந்தேன். அதையும் நேற்று நீக்கினேன்.
நிம்மதியாக பல வாரப் பத்திரிகைகளைப் படிக்க முடிந்தது. கிண்டிலில் புத்தகம் வாசிக்க முடிந்தது. (Ivory thones புத்தகத்தை போகன் படிக்கச் சொன்னார். சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன். ஒரே நாயர் புராணம். நாயர் மத்வராக போகன் நாயராகிவிட்டாரா எனக் கேட்கவேண்டும் – சமநிலைக்காகத்தான்!) மன இறுக்கம் குறைந்தது போல இருந்தது. ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாமா, மனைவியிடம் எதாவது வம்பு வளர்க்கலாமா என்றெல்லாம் தோன்றத் தொடங்கியது. ஃபேஸ்புக் நம்மை சிறைபடுத்துகிறது என்பதைப் போலவே நம்மை ஆசுவாசப்படுத்துகிறது என்பதும் உண்மைதானோ?
இந்த யோசனை தோன்றிய நிமிடத்தில் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஒரு வீடியோவை வாட்ஸப்பில் அனுப்பி இருந்தார். அதில் நாம் எத்தனை முறை நம் ஆண்ட்ராய்ட் போனை அன்லாக் செய்கிறோம் என்று இருந்தது. நான் யோசித்துப் பார்த்தேன். கிட்டத்தட்ட 100 முறையாவது இருக்கும். அஃபிஷியலாகவும் சேர்த்துத்தான். இதை ஜெயக்குமாரிடம் சொல்லி, இதைக் குறைக்கவே ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினேன் என்று சொன்னேன். அவர் நான் சொன்னதில் இம்ப்ரஸ் ஆகி அவரும் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறினார் என நினைக்கிறேன்.
ஆனால் நான் வந்துவிட்டேன். 🙂
—
இடைப்பட்ட இந்த மூன்று நாளில், காலச்சுவடு ஆன்லைன் சந்தா செலுத்தி, அகா பெருமாள் எழுதிய கோபுரம் ஏறிக் குதித்து சாதல் கட்டுரை வாசித்தேன். டோண்ட் மிஸ்.
—
துக்ளக் இதழில், மாறன் சகோதரர்கள் டெலிபோன் எக்ஸேஞ்ச் வழக்கில் தப்பித்தது குறித்த கட்டுரை – பிரமாதம். இதையும் நிச்சயம் வாசிக்கவும்.
—
குமுதம் இதழில் ரஜினியின் ஆன்மிகப் பயணம் குறித்த கட்டுரை – ரசிகர்கள் வாசிக்கவும். குறைந்தபட்சம் அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதற்காகவாவது.
—
நியூஸ் லாண்டரி பாட்காஸ்ட்டில் (ஹாஃப்தா) பழைய எபிஸோட் ஒன்றைக் கேட்டேன். கமல் அரசியல் நுழைவு குறித்து. கடுமையாக ஓட்டி இருந்தார்கள். அதே பாட்காஸ்ட்டில், காவிரி பற்றிய கட்டுரை (கட்டுரையா டாக்குமெண்ட்ரியா அல்லது இரண்டுமா எனத் தெரியவில்லை) எழுதியவர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது, விவேக் என நினைக்கிறேன்) பேசினார். கட்டுரைக்காக எத்தனை கஷ்டப்பட்டார் என்பது பற்றியும் ஜர்னலிஸத்தின் தேவை அது என்றும் சொன்னார். அக்கட்டுரை எங்கே கிடைக்கும் எனத் தேடவேண்டும். இவர் தமிழ்நாட்டுக்காரர். தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற கருத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக கள ஆய்வை கர்நாடகாவில் இருந்து துவங்கி இருக்கிறார். முதல் பாகம் கர்நாடகாவில் காவிரி. இரண்டாம் பாகம் தமிழ்நாட்டில் காவிரியாக இருக்கலாம். இது கட்டுரையா அல்லது யூ ட்யூப் வீடியோவா என்றும் தெரியவில்லை. இன்னொரு முறை கேட்டுப் பார்த்தால் புரியும்.
—
இனி அடிக்கடி இப்படி 2 அல்லது 3 நாள் பிரேக்கில் போக உத்தேசம்.
மகாராஷ்ட்ரா – சிவப்புத் தொப்பி!
கம்யூனிஸ்ட்டுகள் ரொம்ப ஆர்ப்பரிக்கிறார்கள். எப்படா புரட்சி வரும்னு காத்துக்கிட்டு இருந்தவங்க சிவப்புத் தொப்பியைப் பார்த்ததும், இனி இந்தியாவில் எங்கும் சிவப்பே என்று ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இரிக்கி.
வெளிப்படையாக சிவப்பின் எரிச்சலைச் சொல்ல முடியவில்லை என்று ஒரு சிவப்பாளர். (ஐ மீன் காம்ரேட். நோ கேஸ்ட் ப்ளீஸ்.)
தமிழ்நாட்டுல இல்லாத என்னவோ ஒண்ணு இருக்குன்னு ஆன்மிக_அரசியல்வாதி ஒருவர்.
உண்மையான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பங்கிருந்தால் அதில் என்னவோ இருக்கு என்பதே நம் நிலைப்பாடு. மெல்ல வெளிய வரும்.
புரட்சி இப்படி கொப்பளிக்கும்போது இப்படியெல்லாம் பேசலாமா என்று கம்யூனிஸ்ட்டுகளுக்கு உறவாக ஒட்டுமொத்த தேசமே வரும் – பேச மட்டும். ஓட்டுக்கு வராது. அது நமக்கே.
இத்தனை பெரிய போராட்டத்துக்குப் பிறகும் அங்கே காங்கிரஸோ பிஜேபியோ சிவ சேனையோ வெல்லும்.
இப்படி இருக்கும்வரை நாம் பதற்றப்பட ஒன்றுமில்லை.
விவசாயிகளின் நலனுக்குத் தேவையான நியாயமானவற்றை – அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாகவே இருந்தாலும் – அரசு செய்யட்டும். இதில் வெற்றி தோல்வியெல்லாம் இல்லை. சிங்கூரை நினைத்துக்கொள்வோம்.



