உயிர்க்கத் துலங்கும் உலகு

யாருமே என்னை அழைக்கவில்லை
என் குரலும் யாருக்கும் கேட்கவுமில்லை
மழையோ வெயிலோ காற்றோ பனியோ
சத்தமோ நிசப்தமோ எதுவுமே இல்லை
சூன்யமும் இல்லை
ஆனாலும் எல்லாமும் நிறைந்திருந்தது எப்படி
மனதின் கண்கள் திறக்க
முகத்தின் கண்கள் மறைய
அகத்தின் செவி கேட்க
புறச்செவி ஒடுங்க
உள்ளே உள்ளே இன்னும் உள்ளே
மெல்லப் பரவுகிறது
அன்று பிறந்த மாசற்ற சிசு ஒன்றின் வாசம்
உயிர்க்கத் துலங்கும் உலகு.
 

Share

Comments Closed