பிம்பம் பற்றிய கவிதைகள்

கை நழுவிக் கீழே விழும்
கண்ணாடிக் கோப்பை
தரையைத் தொடுமுன்
கைநீட்டியிருக்கவேண்டும்
தேவதை
உன் பிம்பத்தைக் காப்பாற்ற

*

உடைந்த பலூனின் சிதறல்கள்
பெரிதும் சிறிதுமாய்
கலைந்தபோன கோலக் கம்பிகளுக்குள்
தெறித்துப்போன உன் பிம்பம் போல
ரசமுள்ள கண்ணாடியா என்ன
ஒவ்வொன்றும் தனித்துவம் பெற?

*

பிம்பமற்ற
பிம்பத்துக்குள்
அடங்கிவிட வேண்டும்
அதுவே பிம்பமென!

*

மறைத்து வைத்திருக்கும்
முகச் சலனங்கள்
ஓடும் நீரின் மேற்பிம்பத்தில்
தெளிவாக, மிகத் தெளிவாக.

*

Share

Comments Closed