குழந்தைமை – கவிதை

 

குதிக்கும் குரங்கு பொம்மையின்

வயிற்றை அமுக்கினால்

பீப்பீ சத்தம் வருகிறது.

பின்னிழுத்துவிட்டால் முன்னோடுகிறது கார்

கைதட்டினால் சப்தமிடுகிறது கிளி

கையிரண்டில் வாளோடு

பேட்டரியில் முன்னேறுகிறான் ரோபோ

காற்றில் மெலிதான உலோகச்சத்தம் ஏற்படுத்தி

திருஷ்டி கழிக்கிறது சீன வாஸ்து

இத்தனைக்குப் பின்னும் சிரிப்பை மறந்து

இல்லாத ஒன்றிற்காக

(எதிர்வீட்டுச் சரவணன்

சோப்பு நுரையை ஊதிக்கொண்டிருக்கிறான்)

அழுதுகொண்டேயிருக்கிறது

வீட்டுக்குழந்தை

Share

Comments Closed