மின்மினிப்பூச்சி – கவிதை

 

தெருவெங்கும் முளைத்துவிட்ட

மின்விளக்குகளின் வெளிச்ச எல்லைக்குள்

அமிழ்ந்துவிட்டது

மின்மினிப்பூச்சியின் ஒளிர்வு, என்றாலும்

எல்லை தாண்டிய இருள்வெளியில்

அப்பூச்சி

மனசுக்குள் புரட்டியெழுப்பும்

உணர்வுகளின் தாக்கத்தையடுத்து

கண்பார்வையிலிருந்து மறைகிறது

மஞ்சள் வெளிச்சப் படர்வு

Share

Comments Closed