அபிலாஷின் உளறல்கள்

உயிரோசையில் வெளியான அபிலாஷின் கட்டுரை இங்கே: 

அபிலாஷின் கிறுக்குத்தனமான கட்டுரை. சரோஜாதேவியில் வரக்கூட லாயக்கற்ற கட்டுரை இது. அங்கங்கே ஆய்வு போன்ற முலாம் பூசி உளறிக்கொட்டும் இந்தக் கட்டுரை சொல்வது என்ன?

* இஸ்லாமியர்களின் அதிக நேரம் உடலுறவு கொள்வார்கள்.

* ராமசேனையினர் வாலை உறவுக்குப் பயன்படுத்தலாம்!

* இஸ்லாமியர்களின் குழந்தைகளே அப்பாவைப் போன்ற சாடையில் உள்ளன.

* உடலுறவின்போது நிகழும் குறியின் இயக்கம், கள்ள உறவின் விந்துவை வெளியேற்றுவதே.

இத்தனை உளறல்களையும் உளறிவிட்டுக் கடைசியில் நம சிவாய என்று முடித்திருக்கிறார்.

முன் தோல் நீக்கத்தைத்தான் சொன்னேன், இஸ்லாமியர்களையா சொன்னேன் என்று மேலும் உளறமாட்டார் என்றே நம்புகிறேன்.

இந்த கேடுகெட்ட்ட கட்டுரையை அபிலாஷ் எழுதினார் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஏனென்றால் அபிலாஷின் கட்டுரை உளறல்களுக்கு ஓர் அளவில்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

இன்னொரு விஷயம், ஜெயமோகன் இவரது படைப்புகளை ஊனத்தை வைத்து எடைபோட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் கட்டுரையிலும் தன்னை நொண்டி என்று கூறியிருக்கிறார். தேவையே இல்லாத சுய பச்சாதாபம் இங்கே ஏன் வந்தது? இந்த பச்சாதாபத்தை அவரது படைப்புகளைக்கொண்டு மிகச்சரியாக ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் ஊடுருவினால் ஓட ஓட வசைபாடுவது. இதுதான் அபிலாஷ்.

Share

மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி கட்டுரையை முன்வைத்து

இன்றைய (15-அக்டோபர்-2013) தமிழ் தி ஹிந்துவில் வித்யா சுப்ரமணியம் எழுதிய ஆர் எஸ் எஸ் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோசமான கட்டுரை. படேலிடம் ஆர் எஸ் எஸ் வாக்குக் கொடுத்ததாம். என்னவென்று? அரசியலில் பங்கேற்காது என்று. அதனால்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தடை நீக்கப்பட்டதாம். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி அரசியலில் பங்கேற்கலாம் என்று கேட்கிறது கட்டுரை. இப்போது ஆர் எஸ் எஸ் என்ன பங்கெடுத்தது? மோதியின் பிரதம வேட்பாளர் அறிவிப்பில் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு இருக்கிறதாம்.

* இத்தனை நாளாக ஆர் எஸ் எஸ் பிஜேபியின் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்று வித்யா சுப்பிரமணியம் நம்புவது வேடிக்கை. இப்போதைப் போலவே எப்போதும், நேரடியாகவா மறைமுகமாகவா என்று சொல்லமுடியாத வண்ணம், ஆர் எஸ் எஸ் பாஜகவில் தன் அதிகாரத்தைச் செலுத்தியே வந்திருக்கிறது.

* ஆர் எஸ் எஸ் தன் அதிகாரத்தை பாஜகவிலிருந்து விலக்குமானால் நான் பாஜகவை மற்றுமொரு சாதாரணக் கட்சியாகவே பார்ப்பேன். அத்தனையையும் மீறி பாஜவை ஓரளவு நான் நம்பக் காரணம் இந்த ஆர் எஸ் எஸ் அதிகாரமே. பாஜகவில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களே கட்சியின் தூண்கள். 

* படேலிடம் வாக்குக் கொடுத்துவிட்டார் என்று பலமுறை வித்யா சுப்ரமணியம் கிட்டத்தட்ட கதறியிருக்கிறார். படேல் மேல் அத்தனை மதிப்பா? சரி ஒழியட்டும். அன்று வாக்குக் கொடுத்துவிட்டால், அதன் பின்பு ஆர் எஸ் எஸ் தன் நிலையிலிருந்து மாறவே கூடாதா என்ன? 

* படேலிடம் வாக்குக் கொடுத்ததைச் சொல்லும் வித்யா சுப்ரமணியம், ஆர் எஸ் எஸ் தன் தொண்டர்களை கட்சிகளில் இணைந்து பணியாற்ற அனுமதித்தது என்றும் சொல்கிறார். அப்புறம் என்ன? கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற அனுமதிப்பது என்பது கைதட்டிக்கொண்டிருக்கவா? அதிகாரத்தைச் செலுத்தத்தானே!

* கோல்வல்கர் அதிகாரத்தின் மேல் வெறுப்பு உள்ளவராக இருந்தார். எனவே அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அப்போதே அரசியலில் நேரடியாகப் பங்குபெறவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்தான் செய்தன. தேவரஸ் இதனை முக்கியமான விஷயமாகவே பார்த்தார். எனவே இது புதிய கண்டுபிடிப்பல்ல.

* கோல்வல்கர் மன்றாடினார் என்றொரு எள்ளல். உண்மையில் அவர் மன்றாட மட்டும் செய்யவில்லை. மிகக் கடினமான காலகட்டத்தில் ஆர் எஸ் எஸ் என்ற இந்தியாவின் உன்னத அமைப்பை வழி நடத்தும் அவருக்கு தன் காரியம் ஒவ்வொன்றும் எத்தனை முக்கியமானது என்று தெரிந்திருந்தது. எனவே அரசுக்கு உகந்தமொழியில் சொல்லிப் பார்த்தார். பின்பு வேறு வழியில்லை என்றால் ஆர் எஸ் எஸ் அரசியலில் நேரடியாகப் பங்குபெற வேண்டியிருக்கும் என்ற முடிவை நோக்கி ஆர் எஸ் எஸ் செல்வதைப் பார்த்து பயந்த நேரு அரசு தடையை நீக்கியது. ஏன் இந்தப் பயம்? அன்றைய காங்கிரஸில் ஹிந்துமதத்தைப் போற்றிய, தேசியத்தை உயிராக மதித்த பலர் இருந்தனர். எனவே ஆர் எஸ் எஸ் நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தால் காங்கிரஸை உட்கொண்டுவிடும் என்று நேருவுக்குப் புரிந்திருந்தது. இதைவைத்து விளையாடித்தான் ஆர் எஸ் எஸ் தடையை நேருவிய அரசு நீக்கியது. எனவே மன்றாடுதல் என்னும் வார்த்தை எள்ளலோடு வரலாறு முடிந்துவிடவில்லை. தன் கட்சியைக் காப்பாற்றவே நேருவிய அரசு தடையை நீக்கியது. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்குப் பங்கிருக்க வாய்ப்பில்லை என்று படேலும் நேருவிய அரசும் உறுதியாக நம்பியபின்பும் ஏன் ஆர் எஸ் எஸைத் தடை செய்யவேண்டும்? இந்த உறுதிமொழியைப் பெறத்தான்.

இத்தனை உண்மைகளைப் புதைத்துவிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இதேபோல் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வால் பிடித்த கம்யூனிஸ்ட்டுகளின் கணக்குகளுக்குப் பணம் வந்த கதையையும் தமிழ் தி ஹிந்து எழுதவேண்டும்.

இதைப் பற்றிய ஃபேஸ்புக் குறிப்பு இங்கே.

Share

சன் டிவியும் சனிக்கிழமையும்

சன் டிவியிடம் தோற்றுவிட்டேன். கையேந்தி மடிப்பிச்சைதான் கேட்கவேண்டியிருக்கிறது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும்தான் நிம்மதியாக இருந்தோம். கடந்த இரண்டு நாள்களாக நிம்மதியில் விழுந்தது இடி. இனி சனி அன்றும் மெகா தொடர்கள் உண்டாம். ஒவ்வொரு சீரியலிலும் நடிகர்கள் வந்து, நாங்க சனிக்கிழமையும் வருவோமே பெப்பே என்கிறார்கள். மிரண்டு போயிருக்கிறேன்.

இருப்பது சிங்கிள் பெட்ரூம் வீட்டில். எனவே மெகா தொடர்கள் பார்ப்பவர்கள் பார்க்கட்டும் என்று வேறு எங்கும் செல்லவும் முடியாது. என் அம்மாவை அடக்கி வைக்கவும் முடியாது. ’காசு கொடுத்துதான் எங்கயும் போகமுடியாது. வீட்ல நேரம் போகப் பார்க்கறதும் ஒனக்கு பொறுக்கலையா?’

என் மாமாவுக்கு காது கேக்காது. எனவே அவர் வீட்டில் அவர் மெகா சீரியல் பார்க்கும்போது டிவி சத்தத்தை மினிம் 70ல் வைத்துத்தான் கேட்பார். அந்தத் தெருவே ம்யூட் செய்துவிட்டு இந்த வசனத்தைக் கேட்டுக்கொண்டே அவரவர்கள் வீட்டில் அதே சீரியலைப் பார்க்கலாம். 

இதிலெல்லாம் இருந்து விடுபடுவது சனிக்கிழமைகளில்தான். அதற்கும் உலை வைக்கிறார்கள் சன் டிவிக்காரர்கள். தயவுசெய்து இந்தக் கொலை முயற்சியை உடனே கைவிடுங்கள். இது நல்லதல்ல. ப்ளீஸ். இதற்குமேல் அழுதுடுவேன்.

Share

மேல்வீடு – சிறுகதை

நான் எழுதிய மேல்வீடு சிறுகதை சொல்வனம்.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

Share

புதியவர்களின் கதைகள்

ஜெயமோகனின் வலைத்தளத்தில் புதியவர்களின் கதைகள் வெளியிடப்பட்டு, பதினோரு சிறுகதை எழுத்தாளர்கள் ஜெயமோகனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு மூத்த, முக்கியமான எழுத்தாளரால் இவர்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிக முக்கியமானது. இதனால் இவர்கள் நிச்சயம் நல்ல கவனம் பெறுவார்கள். ஜெயமோகன் இப்படிச் செய்ய நினைத்ததே, வரும் தலைமுறை மீது அவர் வைத்திருக்கும் ஆர்வத்தினால்தான். இப்படி ஏற்கெனவே பல மூத்தாளர்கள் செய்திருந்தாலும், அவற்றுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்தப் பதினோரு எழுத்தாளர்களும் இணையத்தின் மூலம் எழுத வந்தவர்கள் என்பதே. இணையத்தின் வழியே ஒரு சிறுகதை எழுத்தாளர்கள் தலைமுறை உருவாகிவந்தால், தொடர்ந்து சபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இணைய உலகம் கொஞ்சம் தலை நிமிரலாம்.

மேலும் வாசிக்க இங்கே செல்லவும்.

Share

தொலைதல் – சிறுகதை

நான் எழுதிய தொலைதல் சிறுகதை ஜெயமோகனின் தளத்தில் வெளியாகியுள்ளது. சந்தோஷமாக உள்ளது.

கதையை வாசிக்க இங்கே செல்லவும்.

நான் எழுதிய மற்ற கதைகளை வாசிக்க இங்கே செல்லவும்.

Share

Vaali – Some thoughts

தொடக்கக் குறிப்பு: இது வாலியைப் பற்றிய ஆய்வு அல்ல. எனவே ஒத்திசைவு ராமசாமிகள் (http://othisaivu.wordpress.com/2012/03/10/post-100/) கொஞ்சம் விலகி நிற்கவும். 😉

இரண்டாம் குறிப்பு: நான் இங்கே வாலி எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கும் பாடல்களில் சில வாலி எழுதாமல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதை ஒரு புள்ளி விவரப் பிழை என்று மட்டும் கொள்ளவும். உண்மையில் பல திரையிசைப் பாடல்களை யார் எழுதியது என்று கண்டுபிடிப்பதே பெரிய சிரமமாக இருந்தது. அதோடு வாலியும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றிய பாடல்கள் நினைவில் வந்து அருவிபோல் கொட்டுகின்றன. (வார்த்தைகள் முட்டுகின்றன! வாலி!) ஒரு பாடலை நினைக்குபோது அதிலிருந்து அதிலிருந்து என பலப்பல பாடல்கள். ஆய்வுக் கட்டுரை அல்ல என்று சொல்லிவிட்டதாலும் என் மனத்திலிருந்து எழுதுவதாலும் நினைவிலிருந்த வரிகளை மட்டுமே இங்கே குறிப்பிடப் போகிறேன்.

மூன்றாம் குறிப்பு: நான் வாலியை வந்தடைந்தது இளையராஜாவின் வழியாகத்தான். எனவே நான் எழுதப்போகும் இந்தப் பதிவு தொடர்ச்சியாக இளையாராஜவைப் பற்றியும், எனவே வைரமுத்துவைப் பற்றியும் பேசும் வாய்ப்பு உண்டு. எம் எஸ் வி மற்றும் கேவி மகாதேவன் இசையில் வாலி பல நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். நல்ல பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் பற்றித் தெரியாததால் நான் அவற்றைத் தொடவில்லை. 1976லிருந்து 2000 வரை என வைத்துக்கொண்டாலும், 24 வருடங்களில் வாலியை வரையறுத்தாலே அதன் முன்பின்னாக நாம் நீட்டித்துக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து படிக்க…

Share

Mahabharatham – Kumbakonam edition – Announcement

தமிழில் மஹாபாரதம் என்றாலே அது கும்பகோணப் பதிப்பு வெளியிட்ட மஹாபாரதம்தான். அசாதாரணமான உழைப்பில், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பில் வந்த புத்தகம் அது. அத்தகைய மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில் இல்லை.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவரே சரி பார்ப்பது, பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் வெளியிடப்பட்டது.

குறைந்தது நூறு பேர் முன்பதிவு செய்தால், இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு நான்கைந்து மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன். 

விலை ரூ.5,000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்புத்தகம் விலை மதிப்பற்ற பொக்கிஷம்.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் வெங்கட்ராமணனைத் தொடர்புகொள்ள: 098946 61259. மின்னஞ்சல்: venkat.srichakra6@gmail.com

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரைப் பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தை வெளியிடுவார். எவ்வளவு பணம், எப்படிச் செலுத்தவேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share