ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது. ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது.
ரஜினி தூத்துக்குடிக்குப் போகிறார் என்ற செய்தி வந்ததும், அங்கே அவருக்கு எவ்விதமான வரவேற்பு இருக்குமோ என்று ஒரு கணம் யோசிக்கவே செய்தேன். ஆனால் ஃபேஸ்புக் வேறு, நிஜ உலகம் வேறு என்பதை மீண்டும் உணர்த்தியது இன்றைய ரஜினியின் தூத்துக்குடி பயணம். அங்கே முற்போக்காளர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை என்பதாலும், அங்கே ரஜினியை வருங்கால முதல்வர் என்றெல்லாம் அவர்கள் புகழ்ந்ததைப் பார்த்ததாலும், அடுத்த நான்கைந்து நாளைக்கு இன்னும் தீவிரமாக ரஜினியைத் திட்டித் தீர்ப்பார்கள் என்பது உறுதி.
மோதியைப் பிரதமராக்கியது போல ரஜினியையும் இவர்களே முதல்வராக்குவார்கள். யார் சென்றால் கூட்டம் வருகிறது, அது எந்த மாதிரியான கூட்டம், அது சொல்லும் செய்தி என்ன என்று புரிந்துகொள்பவர்களுக்கு ரஜினிக்கு இன்று கிடைத்த வரவேற்பின் உள்ளர்த்தம் புரியும். புரியாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள விரும்பாதவர்கள் அல்லது புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்கள், நயந்தாரா வந்தாலும் இதே கூட்டம் வரும் என்று சொல்லிவிட்டு தப்பிப்பார்கள். தப்பிக்கட்டும்.
Archive for அரசியல்
ரஜினியின் தூத்துக்குடி பயணம்
அந்திமழை ஏப்ரல் 2018
அந்திமழை ஏப்ரல் 2018 இதழ் –
(உடனே அடுத்த அந்திமழை இதழில் நான் எழுதப் போகிறேனா என்று கேட்கப் போகிறவர்கள் நடையைக் கட்டவும்.)
நாற்காலிக் கனவுகள் என்ற தலைப்பின் கீழ் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. என்றாலும் தூக்கிச் சாப்பிடும் கட்டுரை நாற்காலிக் கனவைப் பற்றியதல்ல. டி.எம். சௌந்தர ராஜனைப் பற்றியது. இன்னும் துலக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், விஜயராஜ் என்பவர் டி.எம்.எஸ்ஸைப் பற்றி எடுத்திருக்கும் ஆவணப்படம் பற்றியது. (மதிமலர் என்பவர் எழுதி இருக்கிறார்.)
1968லேயே இளையராஜா இசையமைப்பில் தீபம் என்ற படத்துக்காக (பின்னர் சிவாஜி நடித்து வெளிவந்த தீபம் அல்ல) ‘சித்தம் தெளிவடைய முருகனருள் தேடு’ என்ற பாடலை டி.எம்.எஸ் பாடி இருக்கிறார் என்ற தகவலை கங்கை அமரன் சொல்லி இருக்கிறார்! அந்தப் பாட்டை இந்த ஆவணப்படத்தில் சேர்த்திருக்கிறாராம் விஜயராஜ். ஆச்சரியம். (சொக்கன் முன்பு சொல்லித்தான், தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு நபிநாதரிடம் போய்ச் சொல்லு பாடலும் ராஜா இசையமைத்தது என்ற ஆச்சரியமான தகவல் தெரியும்!) இந்தக் கட்டுரையை வாசிக்க: http://andhimazhai.com/news/view/tms-special-article-642018.html (ஆன்லைனில் தொடரும் என்று போட்டிருக்கிறார்கள். அச்சிதழில் தொடரும் என்றெல்லாம் இல்லை.)
இன்னுமொரு சுவாரஸ்யம், ஆவணப்படத்துக்காக ராஜாவும் டிஎம்எஸ்ஸும் சந்தித்துப் பேசியது. அதில், புதிய குரல்களுக்காகத்தான் டிஎம்எஸ்ஸைப் பயன்படுத்தவில்லையே தவிர அவரை ஒதுக்கவில்லை என்று ராஜா அவரிடமே சொல்லி இருக்கிறார். மற்றபடி தான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த ஆண்குரல் டிஎம் எஸ் என்று ராஜா சொல்லி இருக்கிறார்.
இந்த ஒரு கட்டுரைக்காக இந்த இதழை வாசிக்கவேண்டும். சிறிய கட்டுரைதான்.
நாற்காலிக் கனவுகள் தலைப்பில் வந்த கட்டுரையில் மாலனின் கட்டுரை (வைகோ பற்றியது) அட்டகாசம். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அதை வெளியிட்டார் என நினைக்கிறேன். மற்றவை எல்லாம் மிக அவசரத்தில் அல்லது இடப்பற்றாக்குறையில் எழுதப்பட்டவை போல உள்ளன.
அகில் எழுதிய கட்டுரையில், எம்ஜியார் எஸ் எஸ் ஆர் கழகம் என்ற பெயரில் எஸ் எஸ் ஆர் ஒரு கட்சி தொடங்கினார் என்ற செய்தி (மட்டும்!) வியப்பளித்தது.
இந்த இதழில் சில பக்கங்கள் கனடா சிறப்பிதழாகவும் வந்துள்ளது. அதில் அ.முத்துலிங்கத்தின் (சுமாரான) பேட்டி ஒன்றும் வெளியாகியுள்ளது.
மேக்ஸ்டரில் கிடைக்கும் என நினைக்கிறேன். தேவைப்படுபவர்கள் வாங்கி வாசிக்கவும்.
போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்
போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்
* அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் உடைக்கப்படும் பஸ்கள் மற்றும் ரயில்களுக்கான சேதாரத்தை அந்தக் கட்சியிடமிருந்து வசூலிக்கவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் அந்தக் கட்சியைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. கடைக்காரரே உடைத்துக்கொண்டார் என்றால் அதை கட்சியே நிரூபிக்கவேண்டும். நிரூபிக்க முடியாதே என்றால் போராட்டம் நடத்தக்கூடாது. இது பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, அதிமுக, திமுக என எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதென்பதறிக.
* அரசியல் கட்சிகள் அல்லாத அமைப்புகள் போராட்டம் நடத்தி அதனால் ஏற்படும் நஷ்டங்களை அந்த அமைப்பு தரவேண்டும். இல்லையென்றால் அந்த அமைப்பைத் தடை செய்யவேண்டும். இது ஆர் எஸ் எஸ் உட்பட்ட எல்லா அமைப்புக்கும் பொருந்துமென்பதறிக.
* பரிட்சை நடக்கும் நாளில் எவ்விதப் போராட்டமும் நடக்கக்கூடாது. அப்படி அல்லாமல் ஏதேனும் கட்சியோ அமைப்போ போராட்டத்தை அறிவிக்குமானால் அந்த அமைப்பின் தலைவர்களைக் கைது செய்யவேண்டும். போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், அந்தக் கட்சி தேர்தலில் பங்கேற்பதை ஒரு தடவை தடை செய்யவேண்டும். அமைப்பை ஒரு வருடத்துக்குத் தடை செய்யவேண்டும்.
* உண்ணாவிரதம் என்பதே குறைந்தது மூன்று நாள் உண்ணாவிரதமாக இருக்கவேண்டும். காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரையிலான டுபாக்கூர் உண்ணாவிரதத்தை உடனே தடை செய்யவேண்டும். மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்து, முதல் ஒரு மணி நேரத்திலேயே உண்ணாவிரதத்தின் காரணம் சரியானால்கூட, மூன்று நாள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து நடத்தி முடிக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயவேண்டும். அப்படி ஒருவேளை, தெரியாத்தனமா இருந்துட்டேன் என்று உண்ணாவிரதம் இருப்பவர் கதறினால், பொதுவில் இனி ஒருநாளும் என் வாழ்நாளில் உண்ணாவிரதம் இருக்கமாட்டேன் என்று அவரைச் சொல்லச் சொல்லி அதை லைவ் வீடியோவாக ஒளிபரப்பவும் வேண்டும். பின்னர் மட்டுமே அவர் அந்த உண்ணாவிரதத்தைக் கைவிடலாம். கருணாநிதி தொடங்கி ஜீயர் வரை அனைவருக்கும் இவ்விதி பொருந்துமென்றறிக.
* வெள்ளிக் கிழமையோ திங்கள் கிழமையோ அல்லது இரண்டு விடுமுறைகள் வரும் நாளுக்கு முதல் நாளோ மறுநாளோ பந்தோ கடையடைப்போ நடத்தக்கூடாது.
* எந்தத் தொலைக்காட்சியும் பந்தை நேரடியாக அரை மணி நேரத்துக்கு மேல் ஒளிபரப்பக்கூடாது. கலவரம் என்றால் நிச்சயம் ஒளிபரப்பக்கூடாது. இரண்டு நாள் கழித்து கொஞ்சம் வேகம் அடங்கியதும் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிக்கொள்ளலாம்.
நிபந்தனைக்குட்பட்டு நீங்க போராட்டம் நடத்தி எங்களுக்கு நல்லது செஞ்சா போதும்.
#மனம் நதிநீர் போல அமைதியாக இருக்கும்போது எழுதிய பதிவு இது.
ஒரு நேர்காணல், ஒரு பேச்சு
ஒரு நேர்காணல், ஒரு பேச்சு
* நிர்மலா சீதாராமன் – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளை எதிர்கொண்ட விதம் மிக நன்றாக இருந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் முடிந்த அளவு தமிழில் பதில் சொன்னார். அவரது தமிழ் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தாலும், கருத்துகள் சரியாகச் சென்று சேர்வதில் எக்குழப்பமும் இருக்கவில்லை. மிகத் தீர்க்கமாகவே பதில் சொன்னார். பாண்டே குறுக்கே குறுக்கே கேட்கும்போதெல்லாம் பாண்டேவைக் கண்டிக்கத் தவறவில்லை. ‘நீங்க ஒவ்வொண்ணா சொல்லிக்கிட்டே இருப்பீங்க, அதுக்கு ஆம்/இல்லைனு பதில் சொல்லிக்கிட்டே இருக்கணுமா?’ என்ற பதிலில் பாண்டேவே கொஞ்சம் அடக்கித்தான் வாசித்தார் என்று தோன்றியது. சில கேள்விகளுக்கு, பாண்டேவைக் குறை சொல்லும் விதமாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன். ராகுலின் டிவீட் மற்றும் ஓபிஎஸ்ஸின் மோதி பற்றிய கருத்து இரண்டையும் பாண்டே கோட் செய்ததை நிர்மலா சீதாராமன் புரிந்துகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் பாண்டேவையே குறை சொன்னார். ஒரு கட்டத்தில் பாண்டே அப்படியே அதை விட்டுவிட்டார். கேள்வி கேட்கும் ஊடகத்தினரை இப்படி ஒரு கட்டத்துக்குள் இருக்கச் செய்வது தேவைதான் என்றாலும், பாண்டேவுக்கும் இது நிகழ்வது கொஞ்சம் பாவமாகத்தான் உள்ளது. ஏனென்றால், ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என எல்லாரையும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கேள்வி கேட்பது பாண்டே மட்டுமே. மற்ற ஊடகத்தினர் ஹிந்துத்துவர்களுக்கு எதிராக மட்டுமே பொங்குவார்கள். ஆனால் அவர்கள் பட்டியலில் பாண்டேவையும் நினைத்துக்கொண்டுவிட்டார் நிர்மலா சீதாராமன் என நினைக்கிறேன். இதை மட்டும் நிர்மலா சீதாராமன் தவிர்த்திருந்திருக்கலாம்.
நிர்மலா சீதாராமன் எல்லாப் பேட்டிகளிலுமே மிகக் கறாராகப் பேசுகிறார். உள்ளத்தில் உண்மை இல்லாமல் போனால் அது வெற்று அகங்காரமாக ஆகிவிடும். நூலிழையில் நடமாடு வித்தை இது. ஆனால் நிர்மலா சீதாராமன் பேசும்போது அது தன்னம்பிக்கையின், தன் நேர்மையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இந்தப் பேட்டியிலும் அப்படியே. எந்தக் கேள்விக்கும் தயங்கவோ தத்தளிக்கவோ இல்லை. தமிழ்நாட்டின் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வருவார் என நினைத்தேன். ஆனால் அந்தப் பேச்சு கொஞ்சம் தீவிரமடையும் நேரத்தில் சட்டென சுதாரித்துக்கொண்ட மோதி அவரை பாதுகாப்பு அமைச்சராக்கிவிட்டார்! நிர்மலா சீதாராமன் இன்னும் உயரத்தைத் தொடுவார் என நினைக்கிறேன். பார்க்கலாம்.
* புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் பேச்சு, பூணூல் அறுப்புக்கு எதிராக மயிலாப்பூரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியது. திராவிடக் கட்சிகளின், திராவிடக் கொள்கையின் தோல்விகளைப் பற்றியும், பூணூல் அறுப்பு என்பது தரும் வலியை ஒத்த வேதனையை புதிய தமிழகம் கட்சி பல பத்தாண்டுகளாக அனுபவித்து வருகிறது என்பதால் இதைப் புரிந்துகொள்ளமுடிகிறது என்பது பற்றியும் பேசினார். அவரது தனிப்பட்ட வாழ்வில் பிராமணர்கள் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். ஒரு சமூகமாக பிராமணர்கள் செய்ததைவிட பிற சமூகங்களே தலித்துகளுக்கு அதிகம் பிரச்சினைகளைச் செய்திருக்கிறார்கள் என்றும், ஆனால் திராவிடக் கட்சிகள் அச்சமூகங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்றும் சொன்னார்.
இவையெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படுபவைதான். திராவிடத் தரப்பு இதை எளிமையாக எதிர்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணசாமி எத்தனை தூரம் நம்பகத்தனைக்கு உரியவர் என்பது இன்னொரு விஷயம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி இச்சூழ்நிலையில் கிருஷ்ணசாமி பேசி இருப்பது மிகப்பெரிய விஷயம். நிச்சயம் பாராட்டப்படவேண்டியது இது. பூணூல் அறுப்புக்கு ஹிந்துத்துவ இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடியிருக்கவேண்டும். பெரிய அளவில் அதை எதிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது எங்கே பிராமண ஆதரவுக்கட்சி என்ற முத்திரைக்கு மீண்டும் கொண்டு போய்விடுமோ என்று அஞ்சினார்களோ என்னவோ, கண்டித்ததோடு நிறுத்திக்கொண்டார்கள். அந்நிலையில் கிருஷ்ணசாமி இத்தனை தூரம் எதிர்த்திருப்பது மிக முக்கியமானது. மற்ற கட்சிகளெல்லாம் வாய்மூடிக் கிடக்கையில் இவர் மட்டுமே இதனை நியாயமாக எதிர்கொண்டிருக்கிறார். பெரிய விஷயம் இது. கிருஷ்ணசாமியின் பேச்சு சுமாரானதுதான் என்றாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு நன்றி.
கவிஞர் தாமரை கொடுத்த இனிமா
இரண்டு நேர்காணல்கள் – சந்திரலேகா ஐ ஏ எஸ், சிவாஜி சொண்டிநேனி
கௌதமி – ரங்கராஜ் பாண்டே நேர்காணல்
ரங்கராஜ் பாண்டே கௌதமியுடன் நிகழ்த்திய நேர்காணல் (கேள்விக்கு என்ன பதில், தந்தி டிவி) படு திராபையாக இருந்தது. நேர விரயம். கௌதமிக்குப் பேச எந்த விஷயமும் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. கமல் மீது வைத்த பெரிய குற்றச்சாட்டைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தார் கௌதமி. 40 நிமிட நேர்காணலில் கௌதமி சொன்னதில் எதுவுமே முக்கியமானதாக இல்லை. மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்டு வென்றவர் என்ற ஒற்றை (முக்கியமான) விஷயத்தைத் தாண்டி கௌதமி எதையும் சொல்லவில்லை. ஏன் இந்தப் பேட்டி என்பது புரியவில்லை.
இந்தக் கொடுமைகளையெல்லாம் விடப் பெரிய கொடுமை, ரங்கராஜ் பாண்டே கௌதமியை அறிமுகம் செய்தபோது சொன்னது – போராளி. கௌதமி ஏன் போராளி ஆனார் என்பது பாண்டேவுக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். புற்றுநோயை எதிர்கொண்டு வென்றதால் போராளி என்று சொன்னாரா எனத் தெரியவில்லை. நம் ஊரில் போராளி என்பதற்கு நிகழ்கால அர்த்தம் ஒன்று உள்ளது. அப்படி இருக்கும்போது கௌதமியை சர்வ சாதாரணமாக போராளி என்றால் அநியாயம்.
40 நிமிடம் கேட்டது (எம்பி3) பெரிய நேர விரயம்.
இன்னும் நான் கேட்கவேண்டிய பேட்டிகள்: நிர்மலா சீதாராமன் – பாண்டே நேர்காணல், சந்திரலேகா ஐஏஎஸ் – ஹரிஹரன் நேர்காணல்
Sterilite issue
Sterlite issue was there for more than 20 years. When I was working at TAC at my twenties, I remember many slogans, posters and banners against Sterlite in the roads of Tuticorin, but very few bothered them. There was a talk there that whenever any political party or politica person need money, they would start shouting against Sterlite. No need to mention here who might be that! Two friends working at Sterlite were my room-met and they said Sterlite was very stable and smooth in day-to-day operation.
Now again Sterlite issue started in Tuticorin since the management was into expansion it seems. This time it won’t be easy to Sterlite to overcome this as the social media is very powerful as it can spread any riot type news very easily. Eg Jallikkattu. Pro-communist mood!
Not only Sterlite, Even SPIC and TAC were creating pollution, may be now too, if TAC is functioning now. No doubt about this. But the respective managements will come up with statistics showing they are very much well under the permissible limits of the pollution control board and of course Sterlite also would do the same.
I remember one movement was there at Tuticorin in 2000s agitating all the jobs in Sterlite must be given only to Tamils. When there was an agitation to close down the industry itself claiming its hazardous, there was yet other agitation demanding the job in the same company! Irony.
Its better to regulate any company rather than closing it down.
https://www.thenewsminute.com/article/thousands-come-together-thoothukudi-protest-against-sterlite-copper-plant-78454