கவிதை

விடியல்

பெரும் புழுதியில்
சூறைக் காற்றில்
ஒரு மல்லிகை மொட்டு
இலக்கற்று
பறந்துகொண்டிருந்த போது
பேரலையில்
பெரு வெள்ளத்தில்
ஒரு மரக்கலம்
திசையற்று
தடுமாறிக் கொண்டிருந்தபோது
பெரும் பிரளயத்தில்
பேரச்சத்தில்
அமைதியற்று
உயிரொன்று
அல்லாடிக் கொண்டிருந்தபோது
கொடு நெருப்பு
தன் விருப்பென
அனைத்தையும்
அணைத்துக் கொண்டபோது
கிழக்கே
வானம்
விடியத் தொடங்கியது
எப்போதும் ஒரு காலையைப் போல.

Share

Comments Closed