கோலமாவு கோகிலா – சமீபத்தில் இத்தனை சிரித்து பார்த்த படம் இதுதான். யோகி பாபு செம. நயந்தாரா நடிப்பு சூப்பர். அனிருத் பின்னணி இசை அபாரம். சூது கவ்வும், நேரம், மூடர் கூடம் வரிசையில் (கொஞ்சம் குறைந்தாலும்) வரவேண்டிய படம். நெல்சனின் முதல் படம் ஒருநாள் கூத்து என்கிறது விக்கி. அதுவே கொஞ்சம் உருப்படியான படம்தான். குறிப்பாக எஃப் எம் பயன்படுத்தப்பட்டது பிடித்திருந்தது. இப்படம் அட்டகாசம்.
ஆனால் ஏன் இப்படி கற்பகாம்பாள் மெஸ்ஸைக் காட்டினார்கள்? ஏன் தொடர்ந்து பிராமணர்களை இப்படி? எரிச்சல் ஒரு பக்கம் என்றால், எப்படி கற்பகாம்பாள் மெஸ்காரர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்பது ஆச்சரியம். அவர்களுக்கு படம் வரும் முன்பு தெரியாது என வைத்துக் கொண்டால், படம் வந்த பின்பு எதிர்ப்பு தெரிவித்தார்களா?