Saturday vibes

#சனி_வைப்ஸ்

நேற்றிரவு 12 மணி முதல் 1 மணி வரை நல்ல ஒலித்தரத்தில் ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டேன். எப்படியோ சுற்றிமுற்றி வழக்கம் போல ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது மற்றும் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து  யேசுசுதாசின் பாடல்களுக்கு வந்து சேர்த்தேன்.

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல் வரிகள் என்ன ஓர் இசைவு. வார்த்தைத் தேர்வுகளும் இடறாத சந்தமும் அர்த்தமற்ற வார்த்தைகளை அள்ளித் தெளிக்காத அவசரமின்மையும் (வாலி  என நினைக்கிறேன்) அற்புதம்.  இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் அனுபவித்து இருந்தால்தான் புரியும்

பின்னர் ஒலித்தது சொர்க்கம் மதுவிலே. உண்மையில் சொர்க்கம்தான். இசை, எஸ்பிபி குரல், வரிகள் என ஒன்றுக்கொன்று போட்டி போடும் பாடல். வரிகளில் கண்ணதாசனின் ஆட்டம் இப்போது எழுதியது போல் இருக்கிறது. இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Share

Comments Closed