Tamil pen puli

பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்தகம் படித்தபோதே அதில் பல இடங்களில் தமிழ்ப் பெண் பு₹லி என்ற புத்தகம் மேற்கோள் கட்டப்பட்டிருந்தது. அப்போதே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் தற்செயலாகக் கண்ணில் படவும் முதலில் அதைஒ படிக்க நினைத்து வாங்கினேன். படித்து முடித்தும் விட்டேன்.

முக்கியமான புத்தகம்தான். நிரோமி பெண் பு₹லியாகச் சேர்வதற்கு முன்பே அவருக்குப் பு₹லிகள் குறித்த சந்தேகம் இருந்திருக்கிறது. அவர்கள் ஏன் டெ₹லோ போன்ற சக போராட்டக்காரர்களை இப்படிச் சாகடிக்கிறார்கள் என்பது குறித்து அதிருப்தி அது. ஆனாலும் அவர் பு₹லிப் பிரிவில் சேர்கிறார். அதற்குப் பின்பு அங்கு நடந்தவற்றையெல்லாம் அவர் விரிவாகப் பதிவு செய்கிறார். அதில் நமக்குத் தேவையான பல தகவல்கள் கிடைக்கின்றன.

சந்தேகப்படுபவர்கள் எல்லாம் ஆதாரம் இல்லாவிட்டால் கூட, துரோகி என்று முத்திரை குத்திப் பு₹லி₹கள் கொன்றிருக்கிறார்கள். அடித்து துவம்சம் செய்து பின்னர் அவர் குற்றவாளி இல்லை என்ற பிறகு சில சமயம் விடுவித்தும் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தப் புத்தகத்தின் 181ம் பக்கம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது.

பு₹லிகள் யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்காமல், தப்பிக்க வேண்டும் என்றால் யார் வீட்டுக்குள்ளாவது சென்று புகுந்து கொள்வார்கள். அங்கேயே தங்குவார்கள். உணவருந்தி உறங்கிவிட்டு ஒரு நாளோ ஒரு வாரமோ கழித்துப் பின்னர்தான் போவார்கள். பல வீடுகள் காலியாகக் கிடந்ததால் அங்கேயே பல நாள்கள் தங்குவார்கள். பக்கத்தில் இருக்கும் கடைகளில் திருடி உணவு உட்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பலவற்றை இந்தப் புத்தகத்தில் போகிற போக்கில் பதிவு செய்திருக்கிறார் நிரோமி.

உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்ட திலீபன் பற்றிய மிக விரிவான சித்திரம் இந்தப் புத்தகத்தில் இணையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்த மரணம் குறித்த இன்னொரு பார்வை, பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் நூலில் அதிர்ச்சிகரமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)

சிறிய வயதில் புலிகள் இயக்கத்தில் சேரும் பெண்களுக்குரிய பல பிரச்சினைகள் இந்தப் புத்தகத்தில் அழகாக வெளிப்படுகின்றன. அழகான ஆண் பையன்களை பார்ப்பது, சைட் அடிப்பது, காதலிப்பது என்று வாழ்ந்திருக்க வேண்டிய வயதில் இவர்கள் துப்பாக்கியுடன் உயிருக்காக ஓடுகிறார்கள். ஆனாலும் அந்த உணர்வுகள் இந்தப் பெண்களை விட்டுப் போய் விடுவதில்லை‌ அழகான பையன்கள் வரும் இடத்துக்குக் காவலுக்குப் போகச் சந்தோஷப்படுகிறார்கள். கூடவே பேன் பிரச்சினைகள், மாதவிடாய்ப் பிரச்சினைகள் குறித்தவையும் உண்டு.

உயிருக்கும் மரணத்துக்கும் இடையே போராடும் போதும் அவர்களுடைய நகைச்சுவை உணர்வு குறையவே இல்லை. குறிப்பாக, சு சு சுடு என்று திக்கிக்கொண்டே தலைவர் ஒருவர் சொல்வதற்குள் நம்மைக் கொன்று போட்டு விடுவார்கள் என்று பேசிக் கொள்வது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் இந்தப் புத்தகம் கச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும், கூடவே ஒரு குறையும் உண்டு‌ பல வரிகளை மொழிபெயர்க்காமல் அதன் சாரத்தை மட்டும் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். இதனால் பல இடங்களில் தொடர்பறுந்து புத்தகம் வேகமாக ஓடுவது போன்ற பிரமை ஏற்படுகிறது. சில இடங்களில் ஏன் சில வரிகளை மொழிபெயர்க்காமல் விட்டார்கள் என்பதே புரியவில்லை. இதை இன்னும் கொஞ்சம் சீரியஸாகக் கவனித்திருக்கலாம். ஆங்கிலப் புத்தகத்தில் பின்னணைப்பாக உள்ள படங்களைக் கூட தமிழ்ப் புத்தகத்தில் சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள். அதேசமயம், ஆங்கிலத்தை ஒப்பிடாமல் படித்தால் தமிழில் படிக்கக் கச்சிதமாகத்தான் இருக்கிறது.

புத்தகத்தின் கடைசி வரியாக இன்றைய ஸ்ரீ லங்காவின் நிலையைத் தமிழில் சேர்த்திருக்கிறார்கள்‌ ஆனால் அது ஆங்கிலத்தில் இல்லை. ஒருவேளை நிரோமியின் ஒப்புதலின் பேரில் கூட இதைச் சேர்த்திருக்கக்கூடும்.

கேள்வி கேட்காதே – தலைவனை நம்பு – ஒரே ஒரு இயக்கம் இருந்தால்தான் தமிழீழம் சாத்தியம் – இவை அனைத்து பு₹லிகளுக்கும் போதிக்கப்படுகின்றன. அவர்களும் கேள்வியே இன்று அதை நம்புகிறார்கள். எத்தனை பேர் இறந்தாலும் அடுத்தடுத்துப் பு#லிகள் அந்தக் காலகட்டத்தில் வந்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். ஆனால் காலமாற்றும் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. எது யதார்த்தம் என்பதை நிரோமியின் புத்தகத்தில் அவர் வார்த்தைகளிலேயே நாம் தெளிவாகக் காணலாம். வன்முறைக்கு எதிராக இன்னொரு வன்முறையில் சேர்ந்து விட்டு, இப்போது வருத்தப்பட்டு எந்தப் பயனும் கிடையாது என்று நிரோமி தெளிவாக விளக்கமாக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் இந்தப் புத்தகம் முக்கியமான ஆவணம்தான்.

நிரோமிக்கும் ரோஷனுக்குமான காதல் அத்தியாயங்கள் அட்டகாசம். கிட்டத்தட்ட ஒரு நாவலைப் போல இருக்கின்றன. ஆங்கிலத்தில் முதலில் வெளிவந்ததாலோ என்னவோ மிக கச்சிதமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அதுவே இந்த நூலின் மிகப்பெரிய பலம். அப்படியே எந்தவித மாற்றமும் இன்றி அழகான திரைக்கதையாக மாற்றி ஒரு திரைப்படமாக எடுத்தால் சந்தேகமே இன்றி பிளாக்பஸ்டராக அந்தப் படம் அமையும்.

நிரோமி இப்படிப் பு₹லிகளைக் குற்றம் சாட்டுவதால் பு₹லிகள் ஆதரவாளர்களின் பார்வையில் நிரோமி கூட ஒரு துரோகியாக இருக்கக்கூடும். எனக்கு அது பற்றித் தெரியவில்லை. ஆனால் இந்திய அமைதிப்படையைப் பற்றியும் சில வரிகளில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்‌ என்ன பிரச்சினை என்றால், பு₹லிகள் மற்றும் இந்திய அமைதிப்படை குறித்த அவரது பார்வை இரண்டையும் நாம் ஏற்க வேண்டும் அல்லது இரண்டையும் நிராகரிக்க வேண்டும் என்பதுதான்.


சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற புத்தகம் ஏன் முக்கியமானது என்பதற்கான சில ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் ‘பி#ர#பா%கர%ன் எழுச்சி வீழ்ச்சியும்’ தமிழில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நூல். பல புத்தகங்கள் பு₹லிகள் இயக்கத்தைப் பாராட்டியும் அங்கங்கே விமர்சித்தும் வரும்வேளையில், முற்றிலுமாக இந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் நூல், பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதைப் பற்றிப் பின்னர் இன்னொரு பதிவில்.


தமிழ்ப் பெண் பு#லிகள், நிரோமி டி சோய்ஸா, தமிழில் சிவகாசி பிரகாசம், உமா மகேஸ் டாட் காம், 200 ரூ

Share

Comments Closed