Arathu and Deepavali crackers

அன்புள்ள அராத்து எழுதிய போஸ்ட் தொடர்பாக:

* நான் வெடியும் போட்டுவிட்டு, நாய்களுக்கு உணவும் அளித்தத்தைப் பற்றி எழுதும்போது, கேங்க் ரேப் செய்துவிட்டு ஜூஸும் கொடுத்தது போல என்று எழுதி இருக்கிறார். இந்த மாதிரி ஒப்பீடெல்லாம் அபத்தமானது. அவர் சொன்ன விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், நான் சொன்னதன் காரணம், இதைப் பார்த்து நாலு பேராவது ஞாபகம் வந்து நாய்களுக்கு உணவு வைக்கமாட்டார்களா என்பதற்காகத்தான்.

* இது அராத்துவுக்கு அல்ல. பொதுவாக. ஒருநாள் வெடியில் நாய் பயப்படுகிறதே என்று குய்யோ முறையோ எனக் கதறிவிட்டு, மறுநாளே கறிக்கடையில் பிரியாணிக்கு வரிசையில் நிற்பவர்களின் கருத்துகளைப் பொருட்படுத்த எந்த அவசியமும் இல்லை.

* இன்று அதே நாய்கள் அதே அன்புடன் அதே சுதந்திரத்துடன் சுற்றிக்கொண்டிருக்கின்றன. வெரிஃபைட். அதே நாய்கள் அதே சுதந்திரத்துடன் அடுத்த இரண்டு மாதங்களில் குட்டிகள் போடும். டோன்ட் வொரி மேன்!

* இதில் என்னைக் குறிப்பிட்டுச் சொல்ல அராத்து சொன்ன காரணம், அரசின் உத்தரவை மதிப்பவன் என்பதால்! ஆம், உத்தரவை மதிப்பவந்தான். ஆனால், அதற்காக என்னவோ நான் புனித ஆத்மா ரேஞ்சுக்கு நினைக்க வேண்டாம். போலிஸ் பார்க்காவிட்டால் சிவப்பு விளக்கின் போதே பைக்கை ஓட்டும், ஒவ்வொரு சமயம் ஹெல்மேட் போடாமல் வண்டி ஓட்டும், குறுகுறுப்புடன் எளிய மீறலைச் செய்துவிடும் சாமானியந்தான். இந்த விதிமீறலும் அப்படித்தான். உடனே, ‘மேச்சா மாமியாரைத்தான் மேப்பேன்’ என்ற பழமொழியைப் போல பேசுவது காமெடியாக இருக்கிறது. கொலை செய்வதும், பாலியல் பலாத்காரமும், தெருவில் ஒரு கடையில் பத்து இட்லியைத் திருடிவிடுவதும் எல்லாமே குற்றங்கள்தான். சட்ட மீறலகள்தான். ஆனால் எல்லாமே ஒரே தரத்தனாவை அல்ல. அதற்காகத்தான் குற்றத்துக்கு ஏற்ப தண்டனைகள். தெருவில் எச்சிய எப்படி நீ துப்பலாம், ஒனக்கும் கேங் ரேப் பார்ட்டிக்கும் நாளைக்கு தூக்கு என்றால் என்ன அர்த்தம்? ஷாக்க கொறைங்கய்யா!

* இதில் சாரு பற்றி அவர் சொல்லி இருப்பது. என்னவோ இலக்கியவாதிகள் என்றால் அப்பாவிகள், ஒன்றுமே தெரியாதவர்கள் என்னும் பில்டப்பைக் குறைங்க சாமிகளா. வெடிக்காக பொங்கறதைவிட இதைப் படிக்கத்தான் ஆயாசமா இருக்கு.

* அடுத்த வருடமும் வெடி வெடிக்கப்படும். கேங் ரேப் எக்ஸாம்பிளர்கள் தயாராக இருக்கலாம்.

Share

Comments Closed