துப்பறிவாளன் – துப்பறிய நிறைய இருக்கிறது

துப்பறிவாளன் திரைப்படம் பார்த்தேன். (கொஞ்சம் மெல்லத்தான் வருவோம்…)

ஏன் இத்தனை கொலைகள்? வெறும் பணத்துக்காகவா? பணத்துக்காக ஒருவர் சாகலாம், ஒட்டுமொத்த கூட்டமும் ஒருவர் பின் ஒருவராகவா? இது என்ன லாஜிக்? ஒரு கொள்கைக்காக தன் உயிரை தீர்த்துக்கொள்வதில் ஒரு ஏற்பு உள்ளது. அதெப்படி வெறும் பணத்துக்காக எல்லாரும் சாவார்கள்? ஜப்பானிய முறைப்படி தன் வயிறை அறுத்து ஒருவர் சாவது வெறும் பணத்துக்காகவா? இதில் பெரிய அளவில் மிஷ்கின் சறுக்கிவிட்டார் என்றே நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய கெடுதல் நடந்து அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்யும்போது, மாட்டிக்கொள்பவர்கள் இப்படிச் சாவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாமல் பணம் ஒன்றே குறிக்கோள் என்பதற்காகச் செயல்பட்டவர்கள், கூலிப்படையினர், இப்படி மாட்டிக்கொண்டதும் வரிசையாகத் தற்கொலை செய்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய பிசகு என்றுதான் இப்போதும் தோன்றுகிறது.

ஒருவேளை எனக்குத்தான் படம் புரியவில்லையோ என்னவோ. 

Share

Comments Closed