ஜனவரி 2015 புத்தக வாசிப்பு

இந்த வருடம் 50 புத்தகங்கள் படிக்க இலக்கு. முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

முதற்கனல் வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரத்தை இனி ஜெயமோகன் விஞ்ச முடியாது என்ற என் மனப்பதிவு பொய்யானது. முதற்கனலின் ஆழமும் செறிவும் வார்த்தையில் சொல்லமுடியாதவை. முதற்கனல் என்பதை அம்பையின் கனலாகக் கொள்ளலாம். ஆனால் அதை காமத்தின் கனலாகக் கொண்டே நான் இந்நாவலை வாசித்தேன். இப்படி ஓர் ஆழமான விவரிப்பு தமிழ்நாவல்களில் காமத்தைச் சார்ந்து நிகழ்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. அப்படி ஒரு விவரிப்பு. ஒவ்வொரு விவரிப்பும் ஒவ்வொரு வகை. அதேபோல் மகாபாரதத்தின் பல்வேறு நம்பிக்கைகளை ஜெயமோகன் விவரிக்கும் விதம் சொல்லில் அடக்கமுடியாதது. மிகப்பெரிய தோற்றம்கொண்டு மகாபாரதத்தின் நோக்கை ஒரு வரலாற்று நோக்கிலும் புனைவு நோக்கிலும் அவர் கண்டு அதை விவரிக்கும் விதம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. இந்த எண்ணம் எனக்குத் தோன்றும்பொதெல்லாம் ஒருவித பயத்தோடுதான் நாவலைப் படித்தேன். மனிதக் கற்பனைளுக்கு அப்பாற்பட்ட ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது எனக்கு உறுதிப்பட்டது. முதற்கனல் ஆழத்திலும் செறிவிலும் நிகரற்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஜெயமோகன் எழுத்தில் கொள்ளும் விரிவு ஆச்சரியமூட்டுகிறது. அம்பை பேருருவம் கொண்டு எழுகிறாள் என்றால் சிகண்டி அசரடிக்கிறான். சிகண்டிக்கும் அம்பைக்குமான பித்து நிலையை ஜெயமோகன் விவரிக்கும் இடமெல்லாம் நான் என் வசமே இல்லை. அம்பை பீஷ்மரை ஏற்றுக்கொள்ள முடிவெடுக்கும் அத்தியாயம் ஜெயமோகனின் எழுத்து புத்திசாலித்தனத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும். இப்படி பல பகுதிகள். 

முதற்கனல் தமிழ்நாவல்களின் உச்சங்களில் ஒன்று.

 

 

THE DRAMATIC DECADE : The Indira Gandhi YearsTHE DRAMATIC DECADE : The Indira Gandhi Years by Pranab Mukherje
My rating: 3 of 5 stars

A flash back of a part our history in a congress man view! Pranab Mukherje tried a lot to prove if not the emergency was imposed by Indra Gandhi, how India might have been affected badly in so many ways with so many statistics. He describes the bravery of Indra Gandhi with so many examples and how she bounced back after so many set backs she faced. He was like a shadow of her and he proudly admits in such a way that that was his great achievement. The formation of Bangladesh has been nicely brought out in this book, however, that is also in a congress man view.

Worth reading.

 

 

View all my reviews

இலங்கை பிளந்து கிடக்கும் தீவுஇலங்கை பிளந்து கிடக்கும் தீவு by சமந்த் சுப்ரமணியன்
My rating: 4 of 5 stars

சமீபத்தில் வாசித்த சிறந்த புத்தகம்.

இலங்கையில் நடந்த போரில் மக்களின் மனநிலை என்ன என்பதை பல்வேறு மக்களிடம் பேசி அதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் சமந்த் சுப்பிரமணியன். இப்புத்தகத்தில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களில் இருந்து, மலையகத் தமிழர்களின் குரல் உட்பட, புலி ஆதரவாளர்களின் குரலும் ஒலித்துள்ளது. சிங்கள அரசின் அட்டூழியங்களையும் புலிகளின் தீவிரவாத அட்டூழியங்களையும் எவ்வித சாய்வும் இன்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

சிங்கள அரசு பயங்கரவாதத்தின் பல்வேறு மாதிரிகளை இப்புத்தகத்தில் படிக்கும்போது ஒரு திகில் திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

தமிழர்களுக்காகத் தொடங்கி தமிழர்களையே ஒழித்துக்கட்டத் தொடங்கிய புலிகளின் குரூரக் கொலைகள் இப்புத்தகத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை போரின்போது கேடயமாகப் பயன்படுத்தியதை எல்லாம் இப்புத்தகத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்ட அத்தியாயம் நம்மை உலுக்கி எடுக்கிறது.

நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம். மிக நல்ல மொழிபெயர்ப்பில் தரத்துடன் வெளிவந்துள்ளது.

 

View all my reviews ஆர்யபட்டா [Āryapaṭṭā]ஆர்யபட்டா [Āryapaṭṭā] by சுஜாதா [Sujatha]
My rating: 2 of 5 stars

சுமாரான நாவல். ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக ரமேஷ் அரவிந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழ்த்திரைப்படமான அந்தநாளை ஒட்டி எழுதப்பட்ட கதை. சுஜாதா இடது கையால் அவசரம் அவசரமாக எழுதியது போலத் தோன்றியது. அந்த நாள் திரைப்படத்தை அப்படியே மீண்டும் எழுத ஏன் சுஜாதா தேவை என்று புரியவில்லை. இதையும் மீறி நாவலில் சுஜாதா வெளிப்பட்ட தருணங்களையெல்லாம் கன்னடத் திரைப்படத்தில் இல்லாமல் ஆக்கியிருந்தார்கள்!

View all my reviews

Share

Comments Closed