மாதொரு பாகன் எரிப்பு – கண்டனம்

மாதொரு பாகனுக்கு தடை, புத்தக எரிப்பு எல்லாம் எரிச்சல் தரக்கூடியது. ஜனநாயகத்தன்மை அற்றது. ஆனால் இதை மைலேஜாக எடுத்துக்கொண்டு பலர் தங்களுக்கு புனிதர் இமேஜ் தேடிக்கொள்கிறார்கள். யாரோ 50 பேர் செய்த கலாட்டா ஒட்டுமொத்த ஹிந்துத்துவ இமேஜ் என்றாக்கப்படுகிறது. இதுதான் ஹிந்துத்துவம் என்ற கொள்கை இன்று இவர்களை வைத்திருக்கும் இடம். எங்கே ஹிந்துத்துவம் இன்னும் போய்ச் சேராத ஹிந்துக்களைக் கண்டடைந்துவிடுமோ என்னும் பதற்றம். மோடிக்கும் இப்படி பதறினார்கள். மோடி பிரதமரானார். ஹிந்துத்துவவாதிகள் அமைதியாக இருந்தால் எதிர்ப்பாளர்களே ஹிந்துத்துவத்தை வளர்த்துத் தருவார்கள் இவர்கள். அதில்லாமல் இப்படி புத்தக எரிப்பு, கோட்சே சிலை என்னும் பைத்தியக்காரத்தனத்தைச் செய்துகொண்டிருந்தால் அந்நியப்பட்டுப் போவார்கள். உண்மையில் ஹிந்துத்துவவாதிகளில் அட்ரஸ் இல்லாதவர்களே இதைச் சொல்கிறார்கள். இதை மீடியா பரப்பி ஒருவித மாயையை உருவாக்குகிறது. இதை ஹிந்துத்துவர்கள் உணர்ந்துகொண்டு செயல்படவேண்டும்.

ஔரங்கசீப் பற்றிய கண்காட்சி தடை செய்யப்பட்டபோது அமைதி காத்தவர்களே இன்று மாதொருபாகனுக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜனநாயகம் வேண்டுபவர்கள் இரண்டையும் எதிர்ப்பவர்களாக இருக்கவேண்டும். மாதொரு பாகனை நான் ஆதரிக்கிறேன்.

Share

Comments Closed