எனது முதல் புத்தகம் – நிழல்கள் கவிதைத்தொகுப்பு

நண்பர்கள் அனைவருக்கும்.

என்னுடைய கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருக்கிறேன். இதுவரை நான் பல்வேறு யாஹூ குழுமங்களிலும், எனது வலைப்பதிவிலும் இதழ்களிலும் எழுதியவற்றை ‘நிழல்கள்’ என்னும் பெயரில் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன்.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html

இந்தக் கவிதையை மரத்தடி யாஹூ இணையக் குழுமத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் கவிதைத் தொகுப்பு வருவதற்கு உதவிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், அட்டைப்பட வடிவமைப்பில் உதவிய மணிகண்டன், அச்சிட உதவிய பத்ரி, கிழக்கு பதிப்பக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

நியூ ஹொரைஸன் வலைத்தளத்தில் இதுவரை கவிதைப்புத்தகத்தை விற்பனைக்கு வைத்ததில்லை. நான் கேட்டுக்கொண்டதற்காக, அதனை நியூ ஹொரைஸன் மீடியாவின் வலைத்தளம் மூலம் விற்பனை செய்ய அனுமதி தந்த பத்ரிக்கு் நன்றி.

Share

Comments Closed