உள்ளிருப்பு – கவிதை

 
காத்திருந்த அந்த இரவில்

சுவர்க்கோழி கத்திக்கொண்டிருந்தது

பல்லி ஒன்று பிள்ளையார் படத்தின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது

கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தபோது

பெருமாள் கோவிலின் புன்னை மர இலையொன்று

சப்தமின்றி வீழ்ந்தது

காற்றில்லாத பெருமழையில் தெருவிளக்கு அணைந்தது

தெருநாய் ஒன்று தடுப்புத் தேடி அலைந்தது

ஆந்தையொன்று தந்திக்கம்பக் கம்பிகளில் அமர்ந்து

கண்கள் திறந்து பார்த்திருந்தது

கவனம் ஒருகூராக்கி

கையோடு கைகள் பிணைத்து, கழுத்தை வருடியபோது

பயந்து பறந்தது

இறக்கை அடக்கி

மூக்கில் அமர்ந்திருந்த ஓர்


Share

Comments Closed