நாடோடி – கவிதை

இடது மேல் மூலையில்

மின்னொளிர் ஊதுபத்தி

தொடர்ந்து பேனா, குறிப்பெடுக்க தாள்

கைகட்டிய விவேகானந்தர்

கணினி

தீபாரதனை மணி சகிதம் விர்ச்சுவல் பூஜை

அரட்டைக்கு இயர்·போன்

ஸ்க்ரீன் சேவராய் குடும்பப்படம்

எஸ் எம் எஸ்ஸில் அதிரும் கைத்தொலைபேசியென

மர மேஜையின் நான்கு மூலைகளுக்குள்

சுருங்கிவிட்டது

உலகம்

வரவழைத்துக்கொண்ட சந்தோஷத்துடன்

சின்னச் சின்னச் சண்டைகள்,

உயிர்ப்பகிர்தலின்றி.

Share

Comments Closed