<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திமுக | ஹரன் பிரசன்னா</title>
	<atom:link href="https://haranprasanna.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://haranprasanna.in</link>
	<description>Haranprasanna</description>
	<lastBuildDate>Tue, 21 Apr 2026 04:22:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>
<site xmlns="com-wordpress:feed-additions:1">32823936</site>	<item>
		<title>TN assembly election 2026</title>
		<link>https://haranprasanna.in/2026/04/21/tn-assembly-election-2026/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 04:22:16 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அண்ணாமலை]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">https://haranprasanna.in/?p=3099</guid>

					<description><![CDATA[<p>அதிமுகவுக்கு இந்த முறை இருக்கப் போகும் பிளஸ் பாய்ண்ட்டுகள்: நியாயமாக இதனால் அதிமுக பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் என்ன பிரச்சினை என்று எனக்கு தோன்றுகிறது? (விஜய் பொதுவாகப் பிரிக்கப் போகும் பெண்கள் ஓட்டு, இளைஞர்கள் ஓட்டு என்பதெல்லாம் அனைத்துக் கட்சியையும் &#8211; முன்னே பின்னே இருந்தாலும் &#8211; ஒரே விதமாகப் பாதிக்கும் என்பதால் அதை நான் பெரிதாக</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2026/04/21/tn-assembly-election-2026/">TN assembly election 2026</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">அதிமுகவுக்கு இந்த முறை இருக்கப் போகும் பிளஸ் பாய்ண்ட்டுகள்:</p>



<ul class="wp-block-list">
<li>திமுகவின் மேல் இருக்கும் எதிர்மனோபாவம்.</li>



<li>திடீரென்று பேய் பிடித்தது போல் எடப்பாடி செய்யும் நல்ல பிரசாரம்</li>



<li>அண்ணாமலை ஒதுங்கி இருப்பாரோ என்று நினைத்த நேரத்தில் மிகச் சிறப்பாக அண்ணாமலையும் செய்யும் பிரசாரம்</li>



<li>இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாகத்தான் பிரசாரம் செய்யும். ஆனால் இந்த முறை ஒரே மேடையில் தோன்றி அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் செய்வது.</li>



<li>விஜய் கட்சி திமுகவிடமிருந்து பெரிய அளவில் ஓட்டுகளைப் பிரிக்கும்.</li>



<li>கிறிஸ்தவர்கள் ஓட்டு நிச்சயம் திமுகவுக்குப் பெரிய அளவில் குறையும். அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு ஓட்டு போட நினைக்கும் கிறிஸ்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்பதால், கிறிஸ்தவர்களின் ஓட்டு பிரிவது அதிமுகவுக்கு குறைவான பாதிப்பையே உண்டாக்கும்.</li>
</ul>



<p class="wp-block-paragraph">நியாயமாக இதனால் அதிமுக பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் என்ன பிரச்சினை என்று எனக்கு தோன்றுகிறது?</p>



<ul class="wp-block-list">
<li>மெய்ன் மைனஸ் பாயிண்ட், இத்தனை செய்து எடப்பாடியையா முதலமைச்சர் ஆக்கப் போகிறோம் என்ற கேள்வி.</li>



<li>என்னதான் விஜய் கட்சி திமுகவின் வாக்குகளை அதிகமாகப் பிரித்தாலும், திமுகவுக்கு எதிராக ஒன்று திரண்டு வந்திருக்க வேண்டிய அதிமுகவின் ஓட்டு நிச்சயம் பிரிந்து விஜய்க்குப் போகும். இது அதிமுகவுக்குப் பெரிய பின்னடைவைத் தரப் போகிறது.</li>



<li>கடந்த எட்டு ஆண்டுகளில் அதிமுக பெரிய அளவில் வளரவில்லை என்பதும், அதிமுகவின் வாக்குச் சதவீதம் தேய்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் உண்மையானால்,‌ அதிமுகவின் தோல்வி தவிர்க்க முடியாத ஒன்று.</li>
</ul>



<p class="wp-block-paragraph">(விஜய் பொதுவாகப் பிரிக்கப் போகும் பெண்கள் ஓட்டு, இளைஞர்கள் ஓட்டு என்பதெல்லாம் அனைத்துக் கட்சியையும் &#8211; முன்னே பின்னே இருந்தாலும் &#8211; ஒரே விதமாகப் பாதிக்கும் என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.)</p>



<p class="wp-block-paragraph">இப்படி எதுவும் நடக்காமல் இருக்க, திமுக தோற்க, என் யூகம் பொடிபட அந்தக் கடவுள் அருளட்டும்.</p>



<hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>



<p class="wp-block-paragraph">இன்றுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில் நாம் கவனிக்க வேண்டியவை என்ன?</p>



<p class="wp-block-paragraph">யாருக்கு வாக்களிக்கக் கூடாது?</p>



<p class="wp-block-paragraph">தமிழ்நாடு முழுக்க போதையைப் பரப்பி இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய ஒரு கட்சிக்கு, நம் மகள்கள், சகோதரிகள் எந்தவிதப் பாதிப்பும் இன்றி வீட்டுக்குத் திரும்புவார்களா என்ற பயத்தை ஒவ்வொரு பெற்றோருக்கும் உருவாக்கிய கட்சிக்கு, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு கட்சிக்கு, ஜாதியும் மதமும் பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டே அனைத்தையும் அதன் அடிப்படையில் பிரித்துச் சூழ்ச்சி செய்யும் ஒரு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். இது நம் அடிப்படைக் கடமை.</p>



<p class="wp-block-paragraph">எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?</p>



<p class="wp-block-paragraph">எந்தக் கட்சிக்கு வாக்களித்தால், மேலே சொன்ன ஒரு கட்சி ஆட்சிக்கு வராதோ அந்தக் கட்சிக்கு வாக்களிப்போம். பெரிய அளவில் திரண்டிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியை ஆதரியுங்கள். என்டிஏவை ஆதரிக்க வேண்டியது நம் அடிப்படைக் கடமை.</p>



<p class="wp-block-paragraph">நோட்டா, பாஜகவுக்காக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருப்பது, அதிமுகவுக்கு வாக்களிக்காமல் இருப்பது &#8211; இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் திமுகவை வெற்றி பெற வைக்கும். அந்தத் தவற்றைச் செய்து விடாதீர்கள்.</p>



<p class="wp-block-paragraph">&#8211;</p>



<p class="wp-block-paragraph">இந்த முறை தேர்தல் சார்ந்த பதிவுகளை மிகக் குறைவாகவே எழுதினேன். அதற்கு, தனிப்பட்ட வகையில் பாஜக தனித்து நிற்காதது ஒரு காரணம். ஆனால் வாக்களிக்கும் போது அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.</p>



<p class="wp-block-paragraph">இத்துடன் தேர்தல் செய்திகள் முடிவடைகின்றன.</p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2026%2F04%2F21%2Ftn-assembly-election-2026%2F&#038;title=TN%20assembly%20election%202026" data-a2a-url="https://haranprasanna.in/2026/04/21/tn-assembly-election-2026/" data-a2a-title="TN assembly election 2026"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2026/04/21/tn-assembly-election-2026/">TN assembly election 2026</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">3099</post-id>	</item>
		<item>
		<title>National Insitute of Open Schooling and Tamilnadu Government jobs</title>
		<link>https://haranprasanna.in/2024/02/22/national-insitute-of-open-schooling-and-tamilnadu-government-jobs/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Feb 2024 04:40:48 +0000</pubDate>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[வேலை வாய்ப்பு]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://haranprasanna.in/?p=2401</guid>

					<description><![CDATA[<p>NIOS எனப்படும் &#8216;தேசிய திறந்தவெளிப் பள்ளிகள்&#8217; குறித்தும், இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இனி தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்று சமீபத்தில் தமிழக அரசு முடிவெடுத்திருப்பது குறித்தும் மாரிதாஸ் தனக்கே உரிய கோபத்துடன் பேசி இருக்கிறார். முக்கியமான காணொளி. கட்டாயம் பாருங்கள். ஏன் திமுக அரசு இந்த முடிவெடுத்தது என்று தெரியவில்லை. இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. எம் சி ஏ கூட</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2024/02/22/national-insitute-of-open-schooling-and-tamilnadu-government-jobs/">National Insitute of Open Schooling and Tamilnadu Government jobs</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">NIOS எனப்படும் &#8216;தேசிய திறந்தவெளிப் பள்ளிகள்&#8217; குறித்தும், இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இனி தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்று சமீபத்தில் தமிழக அரசு முடிவெடுத்திருப்பது குறித்தும் மாரிதாஸ் தனக்கே உரிய கோபத்துடன் பேசி இருக்கிறார். முக்கியமான காணொளி. கட்டாயம் பாருங்கள்.</p>



<p class="wp-block-paragraph">ஏன் திமுக அரசு இந்த முடிவெடுத்தது என்று தெரியவில்லை. இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. எம் சி ஏ கூட தேவையில்லை, திறமையை நிரூபித்தால் போதும் என்று பல நிறுவனங்கள் தங்கள் நிலைப்பாட்டை மேம்படுத்திக் கொண்டு வருகின்றன. இந்த வேளையில் இப்படி ஒரு நிலைப்பாட்டை ஸ்டாலின் அரசு எடுத்திருப்பது அர்த்தமற்றது.</p>



<p class="wp-block-paragraph">ஏன் ஒரு மாணவன் திறந்தவெளிப் பள்ளிக்குப் போகிறான் என்பதையெல்லாம் மாரிதாஸ் விளக்கமாகவே தன் காணொளியில் சொல்லி இருக்கிறார். ஆட்டிஸம், குடும்பச் சூழல் உள்ளிட்ட பல காரணங்களைப் பட்டியலிடுகிறார். அவர் விட்டுவிட்ட முக்கியமான ஒன்று, பள்ளிகள் மீதான பயம்.</p>



<p class="wp-block-paragraph">ஒரு மாணவனுக்கு ஒட்டுமொத்தப் பள்ளிகள் மீதான பயம் தேர்வினால் மட்டுமல்ல, அங்கே இருக்கும் ஆசிரியர்களால், பள்ளி மாணவர்களின் கிண்டலால், சில சமயங்களில் பாலியல் அத்துமீறலால் கூட வரலாம். இவர்களுக்கெல்லாம் கடைசித் தீர்வாக இருப்பது இந்த திறந்தநிலைப் பள்ளிகளே. இந்தப் பள்ளியில் பயின்று, மீண்டும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முக்கியமான நிறுவனங்களில் நல்ல நிலையில் வேலைக்குச் சேர்ந்து, நன்றாக இருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன். இந்த மாணவர்களுக்குத் தேவை, அந்தச் சமயத்தில் ஒரு சிறிய பிரேக் மட்டுமே. அதை எவ்வித இழப்பும் இன்றி ஏற்படுத்தித் தருபவை இந்தத் திறநிலைப் பள்ளிகள். இதில் படித்தால் அரசு வேலைவாய்ப்பு இல்லை என்பது சரியல்ல. அரசு இதை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">அரசுத் தரப்பில் இதில் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார்கள். ஃபிப்ரவரி 13, 2023ல் வெளியான டைம்ஸ் நவ் செய்தியின்படி, ஜெ.குமரகுருபரன் (பள்ளிக் கல்விச் செயலாளர்) சொல்வது, “இப்படி திறந்தநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேறியவர்கள் கல்லூரிகளில் மேற்படிப்படித் தொடரலாம், அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அப்படி கல்லூரியில் தேர்வு பெற்றாலும், அவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்புக் கிடைக்காது’. இதெல்லாம் அநியாயம்.</p>



<p class="wp-block-paragraph">ஜனவரி 1ம் தேதியே தமிழ் தி ஹிந்து இது பற்றிச் செய்தி வெளியிட்டிருக்கிறது. மாரிதாஸ் இதைப் பற்றிப் பேசி இருக்கவில்லை என்றால், நான் அறிந்திருக்கவே மாட்டேன்.</p>



<p class="wp-block-paragraph">மாரிதாஸ் வீடியோ லின்க்: <a href="https://www.youtube.com/watch?v=JMNT5A4F8es&amp;t=14s">https://www.youtube.com/watch?v=JMNT5A4F8es&amp;t=14s</a></p>



<p class="wp-block-paragraph">தமிழ்த்திசை லின்க்: <a href="https://www.hindutamil.in/news/tamilnadu/1176659-national-open-school-class-10th-12th-certificate-is-not-suitable-for-govt-jobs.html">https://www.hindutamil.in/news/tamilnadu/1176659-national-open-school-class-10th-12th-certificate-is-not-suitable-for-govt-jobs.html</a></p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2024%2F02%2F22%2Fnational-insitute-of-open-schooling-and-tamilnadu-government-jobs%2F&#038;title=National%20Insitute%20of%20Open%20Schooling%20and%20Tamilnadu%20Government%20jobs" data-a2a-url="https://haranprasanna.in/2024/02/22/national-insitute-of-open-schooling-and-tamilnadu-government-jobs/" data-a2a-title="National Insitute of Open Schooling and Tamilnadu Government jobs"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2024/02/22/national-insitute-of-open-schooling-and-tamilnadu-government-jobs/">National Insitute of Open Schooling and Tamilnadu Government jobs</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">2401</post-id>	</item>
		<item>
		<title>எம்.ஏ. சமூக அறிவியல் பாடமும் பொன்முடியும்</title>
		<link>https://haranprasanna.in/2021/05/21/social-science-ma-lesson-issue/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Fri, 21 May 2021 04:14:21 +0000</pubDate>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=2227</guid>

					<description><![CDATA[<p>அமைச்சர் பொன்முடி கிளப்பி இருக்கும் பிரச்சினை குறித்து. சமூக அறிவியல் எம் ஏ பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டு புத்தகத்தில் உள்ள சில வரிகள் நிஜமாகவே கொஞ்சம் தீவிரமாகவும் ஒரு சார்பாகவுமே இருக்கின்றன. கொஞ்சம் மட்டும்தான். தெளிவாக சில முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கவேண்டும். அதைவிட முக்கியம், பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களே என்றும் அமைதியை விரும்புகிறவர்களே என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டும். இஸ்லாமிய</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2021/05/21/social-science-ma-lesson-issue/">எம்.ஏ. சமூக அறிவியல் பாடமும் பொன்முடியும்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">அமைச்சர் பொன்முடி கிளப்பி இருக்கும் பிரச்சினை குறித்து. சமூக அறிவியல் எம் ஏ பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டு புத்தகத்தில் உள்ள சில வரிகள் நிஜமாகவே கொஞ்சம் தீவிரமாகவும் ஒரு சார்பாகவுமே இருக்கின்றன. கொஞ்சம் மட்டும்தான். தெளிவாக சில முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கவேண்டும். அதைவிட முக்கியம், பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களே என்றும் அமைதியை விரும்புகிறவர்களே என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் பெரும்பாலான வெகுஜன முஸ்லிம்களின் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டு, அதை ஆதரிக்கும் தீவிர இஸ்லாமியர்களைப் பற்றித் தனியே பேசி இருக்கவேண்டும். வெகுஜன முஸ்லிம்களும் அடிப்படைவாத முஸ்லிம்களும் வேறு என்ற தெளிவான வேறுபாட்டுடன் பேசி இருக்கவேண்டும். இந்த அடிப்படை நியாயம் இல்லாததால் அதில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகளும் அடிபட்டுப் போகின்றன.</p>



<p class="wp-block-paragraph">ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது, அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல் என்றால், இங்கே இருக்கும் திக திமுக கம்யூனிஸ முற்போக்குக் கட்சிகள் அதை எப்படி அணுகுகின்றன என்பது எல்லாருக்குமே தெரிந்ததுதான். வாக்கு வங்கிக்காக அவர்கள் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதும் புதியதல்ல. தாஜா அரசியலுக்காகவே அவர்கள் அன்பு செலுத்துகிறார்கள். நாளையே இந்து வாக்கு வங்கி உருவானால் இவர்கள் எப்படி நடக்கப் போகிறார்கள் என்பதையும் இதே வெகுஜன இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் பார்க்கத்தான் போகிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">பாடத்தில் இருந்து ஒரு பத்தியை வாசித்துக் காட்டிய பொன்முடி, (அவரது முழு பேட்டியை நான் பார்க்கவில்லை) அதற்கு முந்தைய பத்தியில் இந்து முன்னணியின் பெயரும் இருப்பதை வாசித்தாரா என்று தெரியவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்தப் பாடத்தை புகுத்தி இருக்கிறது என்றால், ஏன் இந்து முன்னணியின் பெயரையும் பாஜக புகுத்தவேண்டும்? பாஜவைச் சொல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு காரணமே இல்லை! அதுமட்டுமல்ல, சங்பரிவாரம் மசூதியை உடைத்தது என்றும் அதனால் கலவரங்கள் நிகழ்ந்தன என்றும் இப்பாடப் பகுதி சொல்கிறது. அடுத்து, அதில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறது. இதை முற்போக்களர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.</p>



<p class="wp-block-paragraph">ஹிந்துக்களின் தாக்குதல் என்பது பதிலடி என்பது மிக முக்கியமான ஒன்றே. அதைப் பேசுவது ஏன் முக்கியமானதாகிறது என்றால், எந்த ஊடகமும், எந்த முற்போக்காளரும் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்பதால்தான். அதை இந்தப் பாடப் பகுதி தெளிவாகச் சொல்லி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்தப் பாடத்திட்டத்தை எழுதியவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டார் என்று பொன்முடி சொல்கிறார். யார் அந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் எனத் தெரியவில்லை. துணைவேந்தர் யார் எனத் தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியவில்லை.</p>



<p class="wp-block-paragraph">பாடத்திட்டத்தில் ஈவெராவை பெரியார் என்றும் தமிழர் தந்தை என்றும் வைக்கம் வீரர் என்றும், அண்ணாத்துரையை ஆஹோ ஓஹோ என்றும் தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றும், கருணாநிதியை கலைஞர் என்றும் புகுத்தினால்; ஆரியர்கள் பறக்கும் குதிரையில் காற்றில் அவர்களின் தலைமுடி பின்னால் பறக்க படையெடுத்து திராவிடர்களை வேட்டையாடினார்கள் என்ற ஒரு கற்பனைச் சித்திரம் மனதில் பதியும் அளவுக்குப் பாடங்களை எழுதினால்; கண்ணில் படும் கடவுளர் சித்திரங்களை எல்லாம் நீக்கி, கடவுள் வாழ்த்தை நீக்கி, ஹிந்துப் பெயர்களை நீக்கி, புகைப்படங்களில் வரும் ஹிந்து மதச் சின்னங்களை நீக்கி பாடங்களை எழுதினால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தால், அடுத்தவனுக்கு வாய்ப்பு வரும்போது விரல் சூப்பிக் கொண்டிருக்க மாட்டான். நியாயமாகப் பார்த்தால், திராவிட இயக்கங்கள் செய்த பாடத்திட்டத் திணிப்புப் புரட்டுகளுக்கு மத்தியில், இன்று பொன்முடி சொல்லும் பாடத் திட்டம், மிகச் சரியாகச் சொல்லப்படாத ஒன்றாகவே உள்ளதே அன்றி, முழுப் பொய்யாக இல்லை, புரட்டாக இல்லை.</p>



<p class="wp-block-paragraph">நீங்கள் ஒரு கட்சியாக அரசாக என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதையே உங்களுக்கு மற்றவர்களுக்குச் செய்வார்கள்.</p>



<p class="wp-block-paragraph">(பின்குறிப்பு: கிடைத்த நான்கு பக்கங்களை மட்டுமே படித்தேன். முழு புத்தகத்தையும் படிக்கவில்லை.)</p>



<figure class="wp-block-gallery columns-3 is-cropped wp-block-gallery-1 is-layout-flex wp-block-gallery-is-layout-flex"><ul class="blocks-gallery-grid"><li class="blocks-gallery-item"><figure><a href="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/4.jpg" rel="lightbox[2227]"><img fetchpriority="high" decoding="async" width="899" height="1599" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/4-576x1024.jpg" alt="" data-id="2228" data-full-url="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/4.jpg" data-link="http://haranprasanna.in/?attachment_id=2228" class="wp-image-2228" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/4-576x1024.jpg 576w, https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/4-169x300.jpg 169w, https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/4-768x1366.jpg 768w, https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/4-864x1536.jpg 864w, https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/4.jpg 899w" sizes="(max-width: 899px) 100vw, 899px" /></a></figure></li><li class="blocks-gallery-item"><figure><a href="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/1.jpg" rel="lightbox[2227]"><img decoding="async" width="540" height="960" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/1.jpg" alt="" data-id="2229" data-full-url="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/1.jpg" data-link="http://haranprasanna.in/?attachment_id=2229" class="wp-image-2229" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/1.jpg 540w, https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/1-169x300.jpg 169w" sizes="(max-width: 540px) 100vw, 540px" /></a></figure></li><li class="blocks-gallery-item"><figure><a href="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/2.jpg" rel="lightbox[2227]"><img decoding="async" width="540" height="960" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/2.jpg" alt="" data-id="2230" data-full-url="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/2.jpg" data-link="http://haranprasanna.in/?attachment_id=2230" class="wp-image-2230" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/2.jpg 540w, https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/2-169x300.jpg 169w" sizes="(max-width: 540px) 100vw, 540px" /></a></figure></li><li class="blocks-gallery-item"><figure><a href="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/3.jpg" rel="lightbox[2227]"><img loading="lazy" decoding="async" width="540" height="960" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/3.jpg" alt="" data-id="2231" data-full-url="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2021/05/3.jpg" data-link="http://haranprasanna.in/?attachment_id=2231" class="wp-image-2231" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/3.jpg 540w, https://haranprasanna.in/wp-content/uploads/2021/05/3-169x300.jpg 169w" sizes="auto, (max-width: 540px) 100vw, 540px" /></a></figure></li></ul></figure>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2021%2F05%2F21%2Fsocial-science-ma-lesson-issue%2F&#038;title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8F.%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" data-a2a-url="https://haranprasanna.in/2021/05/21/social-science-ma-lesson-issue/" data-a2a-title="எம்.ஏ. சமூக அறிவியல் பாடமும் பொன்முடியும்"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2021/05/21/social-science-ma-lesson-issue/">எம்.ஏ. சமூக அறிவியல் பாடமும் பொன்முடியும்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">2227</post-id>	</item>
		<item>
		<title>கோவிட் 19 தடுப்பூசி</title>
		<link>https://haranprasanna.in/2021/05/17/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Mon, 17 May 2021 04:22:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஃபேஸ் புக் குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=2238</guid>

					<description><![CDATA[<p>தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். காரணமே இல்லாமல் பயப்படுகிறார்கள். தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது நேரடியாக, மறைமுகமாக அதன் மீது நம்பிக்கையின்மையைப் பரப்பிய ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. அறிவியலை விட இயற்கையே சுத்தம் என்றொரு தியரி இங்கு உண்டு. அதிலும் சில குழுக்கள் தமிழ்நாட்டில் இதையே முழு மூச்சாகச் சொல்கின்றன. இரண்டு வருடம் முன்பு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருவர்</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2021/05/17/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf/">கோவிட் 19 தடுப்பூசி</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். காரணமே இல்லாமல் பயப்படுகிறார்கள். தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது நேரடியாக, மறைமுகமாக அதன் மீது நம்பிக்கையின்மையைப் பரப்பிய ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. அறிவியலை விட இயற்கையே சுத்தம் என்றொரு தியரி இங்கு உண்டு. அதிலும் சில குழுக்கள் தமிழ்நாட்டில் இதையே முழு மூச்சாகச் சொல்கின்றன. இரண்டு வருடம் முன்பு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். ஏன் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று காரணங்களைப் பட்டியலிட்டார். தடுப்பூசி என்கிற மருந்தின் உலகளாவிய லாபி, அதன் பின்பு வந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதால் உலகம் முழுக்க அத்தடுப்பூசி நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் பணத்தின் மதிப்பு என என்னவெல்லாமோ பேசினார். கேட்கும் யாரும் ஒரு நிமிடம் யோசிப்பார்கள். பின்பு அது அவரது மனத்துக்குள்ளே அவரறியாத ஒரு இடத்தில் இருந்துகொள்ளும். இதைப் போல கொரோனா தடுப்பூசி வரும்போது, அப்போதும் சில குரல்கள் அதைப் போடாதே என்று சொல்லும்போது, விவேக் போன்ற ஒரு நடிகர் அதிர்ச்சியாக மரணமடையும்போது, மனதுக்குள்ளே அமிழ்ந்து கிடக்கும் நினைவிலி எண்ணம் தான் மட்டுமே சரி என்னும் ஆங்காரத்துடன் எழுந்து வரும். தமிழ்நாட்டில் இப்போது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. தங்கள் அரசியல் தேவைகளுக்காக தடுப்பூசியைப் பழித்தவர்கள் இன்று மக்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">முதலில் இப்படி இருக்கும், பின்னர் போக போகப் போட்டுக்கொண்டு விடுவார்கள், இது சின்ன பிரச்சினை என்றே நான் நினைத்தேன். ஆனால் இப்போதும் நிறைய பேருக்குத் தயக்கம் உள்ளது. மக்கள் மனதில் இருக்கும் முட்டாள்தனங்களைக் கீழே உள்ளபடி தொகுக்கலாம்.</p>



<p class="wp-block-paragraph">&#8211; தடுப்பூசியால் பலனே கிடையாது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வரத்தானே செய்கிறது.</p>



<p class="wp-block-paragraph">&#8211; தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குத்தான் கொரானா வந்திருக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">&#8211; தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மட்டும்தான் ஒருவர் இறந்திருக்கிறார். என் மாமாவின் சித்தியின் ஒன்றுவிட்ட சகோதரியின் சம்பந்திக்கு இப்படி ஆனது.</p>



<p class="wp-block-paragraph">&#8211; தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாரடைப்பு வரும்.</p>



<p class="wp-block-paragraph">&#8211; தடுப்பூசி என்று உடலுக்குள் செலுத்தப்படுவது கொரோனா கிருமிதான். எனவே கொரோனா வந்தது போலவே உடல் பாதிக்கப்படும்.</p>



<p class="wp-block-paragraph">&#8211; தடுப்பூசி என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு லாபத்துக்காக செய்யப்படும் பிரசாரம்.</p>



<p class="wp-block-paragraph">&#8211; தடுப்பூசி போட்ட பின்பு குடித்தால் மாரடைப்பு வரும், எனவே போட வேண்டாம்.</p>



<p class="wp-block-paragraph">&#8211; யார் வந்து கேட்டாலும் தடுப்பூசி போட்டாகிவிட்டது என்று சொல்லிவிடலாம், யாராலும் கண்டுபிடிக்க முடியாது.</p>



<p class="wp-block-paragraph">இப்படிப் பல காரணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">தடுப்பூசி போட்ட பின்பு இறந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தடுப்பூசி போடாமல் இறந்தவர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. எதை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? இன்றைய நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. எப்படியும் உயிர் போகப் போகிறது என்று நினைத்து தடுப்பூசியை கைவிடுவதற்குப் பதிலாக, அதே பயத்துடனாவது போட்டுத் தொலையுங்கள். உங்களைத் தடுப்பூசி காப்பாற்றும்.</p>



<p class="wp-block-paragraph">போலியோ சொட்டு போட்டதும் குழந்தை மரணம், ஒரு தடுப்பூசி போட்டதும் சிறுவன் மரணம் என்ற கதைகள் எல்லாம் நம் நாட்டில்தான் சாத்தியம். என் மகளுக்கு 6 வயதாக இருந்தபோது ஒரு தடுப்பூசி போடப்பட்டது. அப்போதும் இதே பிரசாரம். நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவள் பள்ளிக்குச் சென்று தடுப்பூசி போடப் போனேன். சுத்தமாகக் கூட்டமே இல்லை. அரசு இலவசமாகத் தந்த தடுப்பூசி. இந்த பிரசாரத்தால் பள்ளி ஆசிரியர்கள் பயந்து போய், அனைவரிடமும் என் முழு சம்மதத்துடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறேன் என்று ஒரு தாளில் எழுதி கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லி இருந்தார்கள். எந்த நாளில் தடுப்பூசி போடப்பட்டதோ அந்த நாளில் 70% குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை. அத்தனை பெரிய பிரசாரம் நடந்தது. நான் என் மகளுக்குப் போட்டுக்கொண்டேன். அன்று மீதி இருந்த 30% குழந்தைகளுக்கும் போடப்பட்டது. ஒரு குழந்தைக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்த லட்சணத்தில்தான் நாம் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்று அரசின் மீது பழியைப் போடுகிறோம், கொஞ்சம் கூட அறிவோ வெட்கமோ இல்லாமல்.</p>



<p class="wp-block-paragraph">ஒருவகையில் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. நேரடியாக, மறைமுகமாக இந்தத் தடுப்பூசியின் மீது நம்பிக்கை இல்லை என்றே அவர்கள் பேசினார்கள். இன்று வந்து யோக்கியன் போல, அப்படியெல்லாம் இல்லை என்று பூசி மெழுகினாலும், இதுவே உண்மை. ஒரு நல்ல விஷயம், இன்று நிலைமையைப் புரிந்துகொண்டு, தடுப்பூசியின் தேவையைப் பேசத் துவங்கி இருக்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">அரசு என்னவெல்லாம் செய்யலாம்.</p>



<p class="wp-block-paragraph">&#8211; அனைத்து நடிகர் நடிகைகளிடம் 30 நொடி வீடியோ பைட் வாங்கி அதை அனைத்து சானல்களிலும் ஒளிபரப்பச் செய்யலாம். (முக்கியமாக இந்த நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தவேண்டும். பாதி பிரச்சினை இவர்களால்தான்!)</p>



<p class="wp-block-paragraph">&#8211; மதக்குருமார்கள் அனைவரிடமும் இதேபோல் பைட் வாங்கி ஒளிபரப்ப வேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">&#8211; அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் இதேபோல் வீடியோ வாங்கி அதை அனைத்து தொலைக்காட்சிகளில் சமூக ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">&#8211; கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட்ட அனைத்து பிரபலங்களிடமும் வீடியோ பைட் வாங்கி ஒளிபரப்பவேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தமிழ்நாடு இத்தனை பின் தங்கி இருப்பது நல்லதல்ல. அபாயமானது.</p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2021%2F05%2F17%2F%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d-19-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259a%25e0%25ae%25bf%2F&#038;title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%2019%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF" data-a2a-url="https://haranprasanna.in/2021/05/17/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf/" data-a2a-title="கோவிட் 19 தடுப்பூசி"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2021/05/17/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf/">கோவிட் 19 தடுப்பூசி</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">2238</post-id>	</item>
		<item>
		<title>ஜோதிமணி &#8211; நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்</title>
		<link>https://haranprasanna.in/2020/05/20/hate-speech-in-tamilnadu-politics/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2020 08:37:27 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[ஆபாசப் பேச்சு]]></category>
		<category><![CDATA[இளங்கோவன்]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<category><![CDATA[ஜோதிமணி]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[துக்ளக்]]></category>
		<category><![CDATA[நாகராஜன்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[மோதி]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=2052</guid>

					<description><![CDATA[<p>கரு.நாகராஜன் ஜோதிமணியைப் பற்றிப் பேசிய விவகாரம் – நாகராஜன் பேசியது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டிய ஒன்று. பாஜகவினரும் இப்படிப் பேசுவது நிச்சயம் எனக்கு அவநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் இதை யாரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதில்தான் கூடுதல் அரசியல் இருக்கிறது. பெண்களை என்று மதிக்காத திராவிட அரசியல் பாஜகவின் நாகராஜனைக் கண்டிக்கிறது. பெண்களைப் போற்றுகிறோம் என்கிற போர்வையில் அவர்களை எத்தனை மட்டம் தட்ட முடியுமோ</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2020/05/20/hate-speech-in-tamilnadu-politics/">ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">கரு.நாகராஜன் ஜோதிமணியைப்
பற்றிப் பேசிய விவகாரம் – நாகராஜன் பேசியது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டிய ஒன்று.
பாஜகவினரும் இப்படிப் பேசுவது நிச்சயம் எனக்கு அவநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் இதை
யாரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதில்தான் கூடுதல் அரசியல் இருக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">பெண்களை என்று மதிக்காத
திராவிட அரசியல் பாஜகவின் நாகராஜனைக் கண்டிக்கிறது. பெண்களைப் போற்றுகிறோம் என்கிற
போர்வையில் அவர்களை எத்தனை மட்டம் தட்ட முடியுமோ அத்தனை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு
நாகராஜனைக் கண்டிக்க என்ன தகுதி உள்ளது? நாகராஜன் ‘கேவலமான மகளிர்’ என்று சொன்னார்.
ஆனால் இவர்கள் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்? கருணாநிதி சிலேடையாகப் பேசுவதாகப்
பேசிய பேச்சை எல்லாம், அவரது தமிழ்ப் புலமைக்கும் கழக ஆண்களின் ஆண்மைக்கும் சான்றாகச்
சொல்லி விதந்தோதியவர்களே இவர்கள். இவர்களது வரலாறே பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டியதிலும்
அவமானப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. ஆனால் பேச்சிலும் எழுத்திலும் மட்டும், அடேயப்பா!</p>



<p class="wp-block-paragraph">ஜெயலலிதாவையும்
மோடியையும் பற்றி மிகத் தரக்குறைவாகப் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இன்று அவரது கட்சியைச்
சேர்ந்தவரை நாகராஜன் விமர்சிக்கவும் அந்தக் கட்சியே மிக யோக்கியமானவர்கள் போலப் பேசுகிறார்கள்.
இத்தனைக்கும் நாகராஜன் பேசிய கேவலமான பேச்சைவிடப் பல மடங்கு கேவலமாகப் பேசி இருந்தார்
இளங்கோவன்.</p>



<p class="wp-block-paragraph">திருமாவளவன் – இவர்
காயத்ரி ரகுராம் பற்றிப் பேசியது, &nbsp;(“குடித்து
விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்?
ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில்”) நாகராஜன் பேசியதே பரவாயில்லையே
என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரமானது. திருமாவளவன் பேசியதைத் தொடர்ந்து அவரது கட்சியினர்
மிக மோசமாக காயத்ரி ரகுராமைக் கீழ்த்தரமாக எழுதினார்கள். திருமணத்துக்கு முந்தைய உறவு
பற்றி குஷ்பூ ஒரு கருத்துச் சொல்லப் போக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல்கட்சிகள்
குஷ்பூவை அரசியல் ரீதியாக ஓட ஓட விரட்டின. அந்த சமயத்தில் குஷ்பூ திரைப்படங்களில் பிற
நடிகர்களுடன் நெருக்கமாக நடித்த படங்களை எல்லாம் இணையத்தில் கொட்டி குஷ்பூவைக் கட்டம்
கட்டினார்கள். இன்று இவர்கள் பாடம் எடுக்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரம் பற்றித்
தமிழ் தி ஹிந்து வலைத்தளத்தில் ஒரு செய்தி (<a href="https://www.hindutamil.in/news/tamilnadu/555149-jothimani-vs-karu-nagarajan-3.html">https://www.hindutamil.in/news/tamilnadu/555149-jothimani-vs-karu-nagarajan-3.html</a>) பார்த்தேன். நாகராஜன் திட்டியதைப் பற்றி
மட்டும் போட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியை கல்லால் மக்கள் அடிப்பார்கள் என்று ஜோதிமணி
பேசியதைப் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. இதுதான் ஊடகங்களின் லட்சணம். </p>



<p class="wp-block-paragraph">திமுகவின் வெற்றிகொண்டான்
பேச்சை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. வெற்றிகொண்டான் உள்ளிட்டவர்களை நாம் விமர்சித்தால்,
இந்த ரசிகர்கள் உடனே வந்து நமக்குப் பாடம் எடுப்பார்கள். வெற்றிகொண்டான் பேச்சு கழகக்காரர்களை
உற்சாகப்படுத்தவாம். திமுகவின் கட்சி மாநாடு நடந்தபோது நாடகம் என்கிற பெயரில் ஜெயலலிதாவை
மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து இரட்டை அர்த்த வசனத்துடன், சொல்லவே கூச்சம் ஏற்படும்
வகையில் ஒரு நாடகம் போடப்பட்டது. கருணாநிதி, அவரது குடும்பம் உட்பட அனைத்து முன்னணித்
தலைவர்களும் அதைப் பார்த்தார்கள். சில முன்னணி தலைவர்களே மேடையில் இரட்டை அர்த்தத்துடன்
பேசினார்கள். பின்னர் அடுத்து அதே போல அதிமுக மாநாட்டில் அதே போன்ற இரட்டை அர்த்த வசனத்துடனும்
கேவலமான சொற்பிரயோகங்களுடனும் கருணாநிதிக்குப் பதிலடி தரப்பட்டது. (<a href="http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_12.html">http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_12.html</a> and <a href="https://www.facebook.com/haranprasanna/posts/714427531911952">https://www.facebook.com/haranprasanna/posts/714427531911952</a>).</p>



<p class="wp-block-paragraph">இப்போது நாகராஜனுக்குப்
பாடம் சொல்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">வெற்றிகொண்டான்
என்றில்லை, தலைவர்கள் வரை இவர்களது செயல்பாடு இப்படித்தான். இதையேதான் பாஜகவும் பின்பற்ற
நினைக்கிறதா என்பதைத்தான் இப்போது பாஜகவும் பாஜகவினரும் பாஜகவின் ஆதரவாளர்களும் யோசிக்கவேண்டும்.
இதுவே பழக்கமாகவும் பின்னர் வரலாறாகவும் மாறிவிட்டால் அதனால் ஏற்படும் அவமானத்தை எப்போதும்
துடைக்கவே முடியாது.</p>



<p class="wp-block-paragraph">பெண்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் ஒருவரைத் திட்டவும் தகுதி வேண்டும். அந்தத் தகுதி நீங்கள் நினைக்கும் போதெல்லாம் வராது. அது தொடர்ச்சியான ஒன்று. எந்தக் கட்சியினர் பேசினாலும், அவர்கள் தங்கள் கட்சிக்காரர்களே என்றாலும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் ஒரு அரசியல்வாதியைக் கண்டிக்காத வரை, மற்ற அரசியல்வாதிகளைக் கண்டிக்க யாருக்கும் தகுதி இல்லை. நாகராஜன் பேசியதைவிட தரக்குறைவாகப் பேசிய ஈவிகேஸ் இளங்கோவனையும் திருமாவளவனையும் கண்டித்துவிட்டுப் பின்னர் நாகராஜனுக்கு வாருங்கள். ஈவிகேஎஸ், திருமாவளவன், ராதாரவி, நாகாரஜன் உள்ளிட்ட அனைவரையும் கண்டிப்பவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.</p>



<p class="wp-block-paragraph">-oOo-</p>



<p class="wp-block-paragraph"><strong>துக்ளக்கில் வெளியான தொகுப்பு சேமிப்புக்காக இங்கே:</strong></p>



<p class="wp-block-paragraph">நாகரிகமான பேச்சு. இந்தப் பேச்சின்போது கருணாநிதியின் குடும்பமே மேடையில் இருந்தது. பெண்களை மதிக்க, பெண்களுக்காக போராட திமுகவை விட்டால் நாதியில்லை!!!</p>



<p class="wp-block-paragraph">கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே&#8230;</p>



<p class="wp-block-paragraph">சில சாம்பிள்கள்&#8230;</p>



<p class="wp-block-paragraph">* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை<br>தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.</p>



<p class="wp-block-paragraph">* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை<br>படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே &#8220;தலைவரையும்<br>அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்<br>காட்டினார்&#8221; என்றும் குறிப்பிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">* வெற்றி கொண்டான், &#8221; இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்<br>பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்&#8230; அம்மா அப்பா<br>உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்<br>கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா &#8220;<br>என்றவர், &#8221; அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..<br>பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த<br>ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.<br>அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!&#8221; என்று குறிப்பிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">* கருப்பசாமி பாண்டியன், &#8220;பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை<br>தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை<br>நடத்தினார். இறுதியாக, &#8220;அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை<br>வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்<br>சுபாவம்&#8221; என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.</p>



<p class="wp-block-paragraph">* பரிதி இளம்வழுதி, &#8221; கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்<br>பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு<br>முன், குண்டம்மாவிற்குப் பின்!&#8221; என்று விளக்கம் அளித்தார்.</p>



<p class="wp-block-paragraph">* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு<br>&#8220;ஆண்டியும் போண்டியும்&#8221; என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.<br>இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்<br>புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்<br>சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்<br>தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.</p>



<p class="wp-block-paragraph">உதாரணத்திற்குச் சில வசனங்கள்&#8230;</p>



<p class="wp-block-paragraph">** &#8220;ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.<br>என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!&#8221;</p>



<p class="wp-block-paragraph">** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது<br>மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: &#8221; அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா<br>அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி<br>பதவியை விட்டு எடுத்துடுவாங்க&#8221;</p>



<p class="wp-block-paragraph">** &#8220;ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?&#8221;</p>



<p class="wp-block-paragraph">&#8220;யாரு? அந்த&#8230;&#8230; குச்சியிலே கோவணம் கட்டியவனா?&#8221;</p>



<p class="wp-block-paragraph">** &#8220;நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க<br>என்ன சொன்னாலும் நடக்கும்&#8230; அவங்களைத் தள்ளிக்கிட்டு<br>வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை<br>வெச்சுச் செய்யுங்க..&#8221;</p>



<p class="wp-block-paragraph">(சுசி என்ற பெயருடைய அந்தச் &#8216;சின்னம்மா&#8217; வருகிறார்)</p>



<p class="wp-block-paragraph">சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: &#8220;இந்த மாதிரி ஒரு<br>ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை.&#8221;</p>



<p class="wp-block-paragraph">சின்னம்மா (சுசி) கூறுவது:</p>



<p class="wp-block-paragraph">&#8220;&#8230;கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த<br>அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே&#8221;</p>



<p class="wp-block-paragraph">** ஒருவர்; &#8221; என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்<br>பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?&#8221;</p>



<p class="wp-block-paragraph">மற்றொருவர்: &#8221; எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!&#8221;</p>



<p class="wp-block-paragraph">** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)<br>&#8220;உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்&#8221;</p>



<p class="wp-block-paragraph">ஆண்டி&#8221; உம்..</p>



<p class="wp-block-paragraph">போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே<br>வைக்கணும்</p>



<p class="wp-block-paragraph">** ஆண்டி : &#8220;லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு<br>குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது&#8230; கும்பகோணம்<br>மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச<br>மாதிரி இருந்தது&#8221;</p>



<p class="wp-block-paragraph">** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)</p>



<p class="wp-block-paragraph">சாமியாடுபவர்: &#8220;எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே<br>வெச்சியாடா? &#8220;</p>



<p class="wp-block-paragraph">எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?</p>



<p class="wp-block-paragraph">சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா&#8230; புடுங்குறேன்<br>புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?</p>



<p class="wp-block-paragraph">எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?</p>



<p class="wp-block-paragraph">சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா&#8230;..<br>.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே&#8230; ஊத்தினியாடா?</p>



<p class="wp-block-paragraph">சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..</p>



<p class="wp-block-paragraph">எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:</p>



<p class="wp-block-paragraph">&#8221; எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்<br>கலைச்சிடுவாங்க&#8221;</p>



<p class="wp-block-paragraph">( நன்றி: துக்ளக் 1.10.03 )</p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2020%2F05%2F20%2Fhate-speech-in-tamilnadu-politics%2F&#038;title=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E2%80%93%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" data-a2a-url="https://haranprasanna.in/2020/05/20/hate-speech-in-tamilnadu-politics/" data-a2a-title="ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2020/05/20/hate-speech-in-tamilnadu-politics/">ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">2052</post-id>	</item>
		<item>
		<title>நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை</title>
		<link>https://haranprasanna.in/2019/09/18/ready-to-fire-nambi-narayanan/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Sep 2019 05:16:27 +0000</pubDate>
				<category><![CDATA[புத்தகப் பார்வை]]></category>
		<category><![CDATA[எம்ஜியார்]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[நம்பி நாராயணன்]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=1913</guid>

					<description><![CDATA[<p>நம்பி நாராயணின் ‘Ready to Fire – How India and I survived the ISRO spy case’ புத்தகம் வாசித்தேன். நம்பி நாராயணன் இஸ்ரோவின் விஞ்ஞானி. அப்துல் கலாமுடன் பணிபுரிந்தவர். பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காங்கிரஸ் அரசால் 1994ல் கைது செய்யப்படுகிறார். பின்னர் சிபிஐ இதை விசாரிக்கிறது. 1996ல் இக்குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும்</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2019/09/18/ready-to-fire-nambi-narayanan/">நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">நம்பி நாராயணின் ‘Ready to Fire – How India and I survived the ISRO spy case’ புத்தகம் வாசித்தேன். நம்பி நாராயணன் இஸ்ரோவின் விஞ்ஞானி. அப்துல் கலாமுடன் பணிபுரிந்தவர். பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காங்கிரஸ் அரசால் 1994ல் கைது செய்யப்படுகிறார். பின்னர் சிபிஐ இதை விசாரிக்கிறது. 1996ல் இக்குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று சொல்லி சிபிஐ இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. 1998ல் உச்சநீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து இவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது. இவருக்குப் பத்து லட்சம் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. அங்கே இவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று 2018ல் தீர்ப்பாகிறது. 2019ல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் அளித்து கௌரவிக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கரும்பாலையில் வேலை செய்து, பின்னர் எதேச்சையாக இஸ்ரோவுக்கு விண்ணப்பித்து, அதுவும் தாமதமாக விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்ந்து, கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை வழிநடத்துவதில் முதன்மையான விஞ்ஞானியாக இருந்து, லிக்விட் ப்ரொபல்ஷன் (ராக்கெட்டை உந்தித் தள்ள உதவும் எரிபொருளாக திடப் பொருளுக்குப் பதிலாக நீர்மத்தைப் பயன்படுத்தும்) தொழில்நுட்பத்துக்காக வாதாடி போராடி அது வெற்றி பெற்ற மிகச் சில நாள்களுக்குள் கைது செய்யப்படுகிறார் நம்பி நாராயணன். அதன் பிறகு இவ்வழக்கில் தான் பட்ட இன்னல்களையும் அதைத்தாண்டி வென்றதையும் விவரிப்பதுவே இப்புத்தகத்தின் நோக்கம். இன்னொரு இழையாக இஸ்ரோவில் இவரது பணியையும் விவரிக்கிறார். இப்புத்தகத்தின் ஆதார நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இஸ்ரோவின் வரலாறாகவே இப்புத்தகம் விரிகிறது. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.</p>



<p class="wp-block-paragraph">கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவின் பழிவாங்கலே, கேரள காங்கிரஸ் அரசு மூலமாக நம்பி நாராயணன் கைது வரை நீள்கிறது. மிகத் திறமையாக ‘நாட்டுக்கு நம்பி நாராயணன் செய்த நம்பிக்கைத் துரோகம்’ என்ற கதையை உருவாக்குகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இரண்டு ஒற்றர்கள் மூலம் தொழில்நுட்பத்தின் வரைபடங்களை நம்பி நாராயணனும் அவருடன் வேலை செய்பவர்கள் சிலரும் விற்றார்கள் என்ற கதை உருவாக்கப்படுகிறது. நம்பி நாராயணன் 6வது குற்றம்சாட்டப்பட்ட நபராகக் கைது செய்யப்படுகிறார். தேசம், அறிவியல், கிரயோஜனிக் தொழில்நுட்பம், இஸ்ரோவின் சக ஊழியர்களுக்கிடையேயான ஈகோ மோதலைச் சமாளித்துத் தன் கனவை நினைவாக்குவதில் போராட்டம் என்றெல்லாம் இருந்தவருக்கு இந்தக் கைது பெரும் அதிர்ச்சியைக் கொண்டு வருகிறது. ஆனால் சிபிஐ இவர் மீது வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் மறுத்து, அனைவரையும் விடுதலை செய்கிறது.</p>



<p class="wp-block-paragraph">எப்படியெல்லாம் ஒற்றுக் கதையைப் புனைகிறார்கள் என்று படித்துப் பார்த்தால் சாதாரணர்களுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்துவிடும், இப்படியெல்லாம் இவர் செய்யாமல் எப்படிக் கதையைப் புனையமுடியும் என்று. அத்தனை விஸ்தாரமாக தேதி வாரியாக இவர் மீது குற்றச்சாட்டுகள் புனையப்படுகின்றன. சாட்சிகள் அனைவரும் மிரட்டப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வைக்கப்படுகிறார்கள். ஆனால் இவர் கடைசி வரை அஞ்சாமல் உண்மைக்காகப் போராடுகிறார். சிபிஐ விசாரிக்கும்போது அனைவரும் பிறழ்சாட்சிகளாக மாறுகிறார்கள். தாங்கள் மிரட்டப்பட்டதையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை (ஐபி) அப்படி சொல்லச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">இந்தியா அப்போதெல்லாம் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கிறது. பிரான்சு அரசு இந்தியாவின் தொழில்நுட்பத்தில் உதவுகிறது. (இவையெல்லாம் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன.) அமெரிக்கா நமக்கு உதவ கேட்கும் தொகைக்கும் பிரான்ஸு அல்லது ரஷியா கேட்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இந்தியா அமெரிக்காவைப் புறக்கணிக்கிறது. எனவே அமெரிக்கா கிரியோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை ஒழித்துக்கட்ட தன்னைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியதாக நம்பி நாராயணன் சொல்கிறார். அதாவது பிஎஸ்எல் வி அக்டோபர் 15 1994ல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுகிறது. 30 நவம்பரில் நம்பி நாராயணன் கைதாகிறார். இந்த விளையாட்டை வைத்து கேரளாவின் கருணாகரணை வீழ்த்த ஏ.கே.அந்தோணியும் உம்மன்சாண்டியும் ஆயத்தமாகிறார்கள். கேரள அரசு வீழ்ந்து கம்யூனிஸ்ட் அரசு வருகிறது. அவர்களும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறார்கள். உள்ளார்ந்த விருப்பம் என்றில்லை. ஆனாலும் நடத்த விரும்புகிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து கேரள அரசுக்கு நஷ்ட ஈடும் விதிக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்த நூலில் உள்ள பல முக்கியமான அம்சங்களைத் தனியே தொகுத்தாலே அது பல பக்கங்களுக்கு வரும். அப்துல் கலாம், விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், டி என் சேஷன் பற்றிய அழகான சித்திரங்கள் இந்நூலில் உருவாகி வருகின்றன. விக்ரம் சாராபாயும், ஹோமி பாபாவும் திடீரென அகால மரணம் அடைவது குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் நம்பி நாராயணன். படிக்கும் நமக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">நம்பி நாராயணின் அபாரமான நினைவாற்றல் இப்புத்தகத்துக்குள் பல பொக்கிஷங்களைக் கொண்டு வருகிறது. அவரது சிறு வயதில் ஆசிரியர் சொல்லும் சிறிய குறிப்பு முதல் (‘எனக்கு நன்றாக சத்தமாகப் பேசத் தெரியும், ஆனால் வேண்டுமென்றே சத்தம் குறைவாகப் பேசினேன், அப்போதுதான் உங்கள் கவனம் கூடுதலாக இருக்கும் என்பதால்’), இவர் முதன்முதல் வேலைக்குச் செல்லும்போது நடுத்தர குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் தொட்டு, இவர் பிரான்ஸில் இருக்கும்போது நடக்கும் நிகழ்வுகள், பின்னர் கைது, விசாரணை எனப் பல இடங்களிலும் பல நுணுக்கமான தகவல்களையெல்லாம் சளைக்காமல் பதிவு செய்கிறார். இதனால் வழக்கு தொடர்பான தகவல்களில் நமக்கு ஒரு நம்பிக்கைத்தன்மை வந்துவிடுகிறது.</p>



<ul class="wp-block-list"><li><em>தங்களது உண்மையான பெயர்களை மறைத்து, தர்மா, சத்யா என்ற பெயர்களைச் சொல்லிக்கொண்டு விசாரிக்கிறார்கள் அதிகாரிகள். தன் பெயர் நீதி என்று சொல்ல நினைக்கிறார் நம்பி நாராயணன்.</em></li><li><em> எதாவது ஒரு முஸ்லிம் பெயரைச் சொல் என்று துன்புறுத்தப்படுகிறார் நம்பி நாராயணன். அப்துல் கலாம் என்று சொல்லவும் ஓங்கி ஒரு அடி விழுகிறது. சிறிய வயதில் கூட விளையாடிய ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே தனக்குத் தெரியும் என்று சொல்லவும், அவரையும் விசாரிக்கிறது கேரள போலிஸ்! (உண்மையில் எந்த அரசு முஸ்லிம்களையும் முஸ்லிம் பெயர்களையும் இப்படிப் பயன்படுத்தியது, அதுவும் எந்தக் காலத்தில் பயன்படுத்தியது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இன்று ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூடப் பெரிதாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்று இன்றைய அரசின் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.)</em></li><li><em> மிகச் சிறிய தவறுகளால்கூட இஸ்ரோவின் சோதனைகள் தோல்வி அடைகின்றன. ஒரு சுவிட்ச்சை அணைக்காமல் விட்டது போன்ற சின்ன தவறுகள்கூட ஒரு சோதனையை சொதப்பி விடுகிறது. இப்படி இஸ்ரோ தொடர்பான பல கவனக்குறைவுகளை, உள்ளே நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான அரசியல்களை அப்படியே வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார் நம்பி நாராயணன். இவற்றையெல்லாம் மீறி இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்படுவது என்பதே ஆச்சரியம்தான் என்ற எண்ணம் நமக்கு வருமளவுக்கு உள் அரசியல் தலைவிரித்தாடுகிறது.</em></li><li><em> எது தேவை என்பதைவிட, யார் அதைச் சொல்கிறார்கள் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது இஸ்ரோவில். இதைத் தாண்டி, லிக்விட் ப்ரொபல்ஷன் தொழில்நுட்பமே சிறந்தது என்பதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்க நம்பி நாராயணன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியதாகிறது. இந்த உள்ளரசியல் மோதலில் ஐயானிக் ப்ரொபல்ஷனை சரியான நேரத்தில் இந்தியா கைக்கொள்ளமுடியாமலும் போகிறது.</em></li><li><em> இந்தியர்களுக்கு என்ன தெரியும் என்று வெளிநாட்டில் நிலவிய, இந்திய விஞ்ஞானிகள் மீதான பார்வையை இஸ்ரோவின் விஞ்ஞானிகள் உடைத்தெறிந்து அசரடிக்கிறார்கள்.</em></li><li><em> ஒரு மெக்கானிக் தொடங்கி வெல்டர் தொட்டு எல்லாரது முக்கியத்துவத்தையும் சொல்கிறார் நம்பி நாராயணன். இவையெல்லாம் அற்புதமான பதிவுகள்.</em></li><li><em> லஞ்சம் தரப்பட்டு கையும் களவுமாகப் பிடிக்க செய்யப்படும் தந்திரத்தில் இருந்து இயல்பான நேர்மையால் தப்பிக்கிறார் நம்பி நாராயணன்.</em></li><li><em>தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய இஸ்ரோவின் செயலகம் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்குப் போகிறது. காரணம் பொறுப்பற்ற, நோக்கமற்ற, லஞ்ச லாவண்யத்தில் ஊறிப் போன திமுக அரசு. இது தொடர்பான கூட்டத்துக்கு அண்ணாதுரை உடல்நலம் இல்லாததால் வரமுடியவில்லை. அமைச்சர் ஒருவர் வருகிறார். முழு போதையில் வருகிறார். அவரைப் பிடிக்கவே இருவர் தேவைப்படுகிறார்கள். விக்ரம் சாராபாய் உடனேயே முடிவெடுக்கிறார், தமிழ்நாடு இதற்கு ஒத்துவராது என. ஆனால் ஆந்திர அரசோ 26,000 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர முன்வருகிறது. அதேசமயம் மகேந்திரகிரியில் (உண்மையில் அது மகேந்திரகிரி அல்ல, பொதிகை) அமைக்கப்படும் துணை நிலையத்துக்கு எம்ஜியார் ஆதரவு தருகிறார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, அதிரடியாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அங்கே அது வெற்றிகரமாக அமைக்கப்படுகிறது.</em></li><li><em> நிலம் கையகப்படுத்துவதில் இன்றைப் போலவே அன்றும் வெறுப்புப் பிரசாரங்களும் பொய்களும் புரட்டுகளும் பரப்பப்பட்டுத் தேவையற்ற பயம் மக்கள் மனத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.</em></li><li><em> ஊடகங்கள் இன்றல்ல, அன்றே வெற்றுப் பரபரப்புக்காகவே பொய்களை, கட்டுக்கதைகளைப் பரப்பி இருக்கின்றன. பொறுப்பே இல்லாமல் மலையாள ஊடகங்கள் நடந்துகொண்டதையும், ராக்கெட் என்பது பற்றியோ அதன் வரைபடங்களை எப்படி விற்க முடியும் என்பது பற்றியோ, அப்படி விற்றாலும் அதனாலும் ஒரு பலனும் இல்லை என்பது பற்றியோ (இப்படி ஒரு முறை போலிஸ் விசாரணையில் நம்பி நாராயணன் சொல்லவும், அப்படியானால் விற்றது உண்மையா என்று எதிர்க்கேள்வி வருகிறது!) அடிப்படை அறிவே அற்ற ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பற்றி விரிவாக எழுதுகிறார் நம்பி நாராயணன். அதேசமயம் ஆங்கில ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாகக் கொஞ்சமாவது அடிப்படை அறிவுடன் செயல்பட்டன என்கிறார். இஸ்ரோவின் வரைபடங்கள் மீன் வைக்கும் பெட்டியில் வைத்துக் கடத்தப்பட்டன, பாகிஸ்தான் வான் மூலம் சிறையைத் தாக்கி நம்பி நாராயணனைக் காப்பாற்றப் போகிறது என்றெல்லாம் எழுதினவாம் மலையாள ஊடகங்கள்.</em></li><li><em> ரஷ்யாவில் ஒரு கண்காட்சியில் ஒரு இயந்திரத்துக்குப் பதிலாக இன்னொரு இயந்திரத்தை வைத்து பார்வையாளர்களை ஏமாற்றுகிறார்கள். இதை நம்பி நாராயணன் பார்த்த உடனேயே கண்டுபிடிக்கிறார். இதெல்லாம் சகஜம் என்கிறார்கள் அவர்கள். காரணம், ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக்கொள்ளவாம்.</em></li><li><em>நம்பி நாராயணன் மீது பல விதங்களில் குற்றம் சுமத்திய புலன் விசாரணை அமைப்பின் தலைவர் ரத்தன் சேகல் (எம்.கே. தர்-ருடன் வேலை செய்பவர்), சி.ஐ.ஏ உடன் பல ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தியதைக் காரணம் காட்டி, நீக்கப்படுகிறார். இதனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பது உறுதியாகிறது என்கிறார் நம்பி நாராயணன்.</em></li></ul>



<p class="wp-block-paragraph">மேலே கூறியவை எல்லாம், இப்புத்தகம் எந்த அளவுக்கு எத்தனை விஷயங்களைப் பேசுகிறது என்பதைப் புரிய வைத்திருக்கும். இதில் ஹைலைட் இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயம்.</p>



<p class="wp-block-paragraph">கேரள அரசு சொன்ன குற்றங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதை எப்படியெல்லாம் சிபிஐ மறுத்தது என்பதைச் சொல்கிறது அந்த அத்தியாயம். இந்த அத்தியாத்தை (ஒட்டுமொத்த புத்தகத்தையும்கூட) ஒரு திரைப்படத்தின் லாஜிக் காட்சிகளைப் போன்ற விறுவிறுப்புடன் படிக்க முடிகிறது. அதில் முக்கியமானது: நம்பி நாராயணன் பிஎஸ் எல்வி2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் தான் ராஜினாமா செய்யப் போவதாக முன்பிருந்தே சொல்லி வந்திருக்கிறார். அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக லிக்விட் ப்ரபல்ஷன் பற்றியது. அதேபோல் பிஎஸ் எல்வி வெற்றிகரமாக ஏவப்பட்டதும் ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்தும் விடுகிறார். தன் மீதான ஒற்றர் வழக்கு வரும் என்று தெரிந்தே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்ததாக கேரள அரசு சொல்கிறது. இதைப் படிக்கும் யாருக்கும் அப்படித் தோன்றத்தான் செய்யும். ஆனால் சிபிஐ அதில் மறைக்கப்பட்ட ஒன்றைச் சொல்கிறது. அந்தக் கடிதத்திலேயே கீழே ஒரு குறிப்பாக, தான் ஏற்கெனவே இந்தத் தேதியில் ராஜினாமா செய்யப் போவதாக முன்பே சொன்னதையும் குறிப்பிட்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு இஸ்ரோ அதிகாரியும் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கேரள அரசு நீதிமன்றத்தில் இந்தக் குறிப்பைப் பற்றி எதையும் சொல்லாமல் மறைத்திருக்கிறது. அதேபோல் மிக முக்கியக் குற்றவாளியான மரியம் ரஷீதா என்னும் ஏஜெண்ட் இவர் புகைப்படத்தைப் பார்த்து, தான் இவரைத்தான் நேரில் பார்த்ததாகச் சொல்லி இவர்தான் நம்பி நாராயணன் என்று அடையாளம் காட்டும் வீடியோ. ஆனால் அதை சிபிஐ மறுக்கிறது. இவர் பெயர் நம்பி நாராயணன் என்று சொல்ல அந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு வரவில்லை என்பதால், வீடியோவை ஒளிப்பதிவு செய்யும்போது அவர் பெயரை எழுதிக் காண்பித்து அதைப் பார்த்துப் படிக்கச் சொல்கிறார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கண்கள் மேலே செல்வதை அந்த வீடியோவில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">இப்படிச் சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கிப் பல விஷயங்களை சிபிஐ மறுக்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் விடுதலை ஆகிறார்.</p>



<p class="wp-block-paragraph">நான் முதன்முதலில் நேருக்கு நேர் என்ற சன் டிவியின் ரஃபி பெர்னாட்டின் பேட்டியில் இவரது நேர்காணலைப் பார்த்தேன். 90களின் பிற்பகுதியில் என நினைக்கிறேன். அன்றே இவர் பதில் சொன்ன விதமும் நம்பிக்கையும் தனக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதி தந்த மன உளைச்சலும் தெளிவாகப் புரிந்தன. ஆனால் அவர் சொன்ன பல விஷயங்கள் புரியவில்லை. இன்று இந்தப் புத்தகம் பலவற்றைத் தெளிவாக்குகிறது. உறுதியுடன் ஒருவேளை நம்பி நாராயணன் எதிர்கொள்ளாமல் போயிருந்தால், இந்நேரம் அவர் தேசத் துரோகியாகி விட்டிருப்பார். நேர்மையுடன் எதிர்கொண்டதால் பத்ம விபூஷனாகி இருக்கிறார். ஆனாலும் அப்துல் கலாமை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் இழந்தவை என்ன என்று புரியலாம். அதை யாராலும் ஈடு செய்யமுடியாது.</p>



<p class="wp-block-paragraph">இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டு வருபவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். யார் கொண்டு வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.</p>



<p class="wp-block-paragraph">பின்குறிப்பு: இந்தப் புத்தகம் பற்றிய, ஆமருவி தேவநாதனின் மதிப்புரை&nbsp;<a href="http://www.valamonline.in/2018/09/blog-post_73.html">வலம்</a>&nbsp;இதழில் வெளிவந்தது. அதைப் படிக்க தவறி விடாதீர்கள்.</p>



<p class="wp-block-paragraph">நன்றி: <a href="https://oreindianews.com/?p=5454">ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்</a></p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2019%2F09%2F18%2Fready-to-fire-nambi-narayanan%2F&#038;title=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%3A%20%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88" data-a2a-url="https://haranprasanna.in/2019/09/18/ready-to-fire-nambi-narayanan/" data-a2a-title="நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2019/09/18/ready-to-fire-nambi-narayanan/">நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1913</post-id>	</item>
		<item>
		<title>நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்</title>
		<link>https://haranprasanna.in/2019/08/14/isro-space-in-tamilnadu-scientist-nambi-narayanan-vikram-sarabhai-annadurai-and-drunkard-minister-mathiyazhagan/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Aug 2019 05:35:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஃபேஸ் புக் குறிப்புகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அண்ணாதுரை]]></category>
		<category><![CDATA[அப்துல்லா]]></category>
		<category><![CDATA[இஸ்ரோ]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[நம்பி நாராயணன்]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=1902</guid>

					<description><![CDATA[<p>இது அப்துல்லாவின் பதிவு. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன். ஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா &#8220;நம்மில் எத்னி பேருக்கு தெரியும்&#8221; டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப்</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2019/08/14/isro-space-in-tamilnadu-scientist-nambi-narayanan-vikram-sarabhai-annadurai-and-drunkard-minister-mathiyazhagan/">நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">இது <a href="https://www.facebook.com/pudugai.abdulla/posts/10215293563160985">அப்துல்லாவின் பதிவு</a>. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன்.<br></p>



<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p><em>ஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா &#8220;நம்மில் எத்னி பேருக்கு தெரியும்&#8221; டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப்பில் கீழ் காணும் செய்தி வந்தது!</em></p><p><em>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-+&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-+&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</em></p><p><em>திமுக விட்ட ராக்கெட்</em></p><p><em>விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.</em></p><p><em>பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா?</em></p><p><em>விக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். மப்பில் இருந்த அமைச்சர் &#8216;கைத்தாங்கலாக&#8217; எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான &#8216;எதிர்பார்ப்பு&#8217;களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.</em></p><p><em>அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. &#8216;தூக்கி&#8217; வரப்பட்ட தண்ணி பார்ட்டி அமைச்சர் மதியழகன்.</em></p><p><em>கண்டு கொள்ளுவோம் கழகங்களை</em></p><p><em>இன்று விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்த நாள்.</em></p><p><em>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;+&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;+&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-</em></p><p><em>இதுல காமெடி என்னன்னா ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1971 இல் செப்டம்பர் மாதம்.</em></p><p><em>ஆனால் அறிஞர் அண்ணாவோ 1969 இலேயே இறந்து போனார். செத்து போன அண்ணாவை விக்ரம் சாராபாய் போயி சொர்கத்துல பார்க்க நினைச்சாரோ என்னவோ!!!</em></p><p><em>இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. கதை சொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மதியழகன் சபாநாயகராக இருந்தார். அமைச்சராக அல்ல! எந்தத் திட்டத்திற்கும் எவரும் சபாநாயகரைச் சந்திக்கவே மாட்டார்கள்.</em></p><p><em>பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பி.ஜே.பி பாய்ஸ். அடுத்தவாட்டி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க&nbsp;🙂</em></p><p><a href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?source=feed_text&amp;epa=HASHTAG"><em>#நம்மில்</em></a><em>&nbsp;எத்தினி பேருக்குத் தெரியும்?</em></p></blockquote>



<p class="wp-block-paragraph">என்னவோ காலையில் கண்ணில் படவும் இது பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடனேயே அப்துல்லா இணையத்தில் தேடி இருக்கவேண்டும். 1971 என்ற வருடம் கண்ணில் பட்டதும், அண்ணாதுரை இறந்தது 1969 என்பது இவருக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">பொதுவாக அப்துல்லா இப்படி எழுதுபவர் அல்ல. நல்லவர். நண்பர். ஆனாலும் சரியான தகவலைச் சொல்லவேண்டும் என்பதற்காக இப்பதிவு.</p>



<p class="wp-block-paragraph">அவர் ஷேர் செய்திருக்கும் கட்டுரை <a href="http://www.valamonline.in/2018/09/blog-post_73.html">வலம் இதழில்</a> வெளியானது. </p>



<p class="wp-block-paragraph">ஆமருவி தேவநாதன் எதையும் வம்படியாகப் பரப்புபவர் அல்ல. அதோடு வலம் இதழ் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாது. முடிந்த வரை இதில் கவனம் எடுத்தே செய்கிறோம். அப்படியும் சில பிழைகள் வருவதுண்டு என்றாலும், இதைப் போன்ற , இல்லாத ஒன்றை கட்டி எழுப்பும் வேலைகள் வரவே வராது.</p>



<p class="wp-block-paragraph">இன்று மதியமே இதைப் போட நினைத்தேன். சரியான ஆதாரத்தோடு போடுவோம் என்பதற்காக இப்போது.</p>



<p class="wp-block-paragraph">இவர் சொல்லி இருக்கும் கருத்து, நம்பி நாராயணன் எழுதிய நூலில் உள்ளது. நூலின் பெயர்: அவர் எழுதப் புகுந்தது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி. எனவே இந்த சின்ன விஷயத்தில் அவர் பொய் சொல்ல முகாந்திரமே இல்லை. அப்படியே அவர் சொன்னதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பதாக திமுக நிரூபித்தால், அது தகவல் பிழை மட்டுமே ஒழிய, ஆர் எஸ் எஸ் புரட்டு அல்ல! நம்பி நாராயண் புத்தகத்தில் உள்ள அந்தப் பக்கங்களை ஸ்க்ரீன் ஷாட்டாக இணைத்திருக்கிறேன்.</p>



<figure class="wp-block-image"><img loading="lazy" decoding="async" width="768" height="1024" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2019/08/IMG_20190813_193152-768x1024.jpg" alt="" class="wp-image-1903" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2019/08/IMG_20190813_193152-768x1024.jpg 768w, https://haranprasanna.in/wp-content/uploads/2019/08/IMG_20190813_193152-225x300.jpg 225w" sizes="auto, (max-width: 768px) 100vw, 768px" /></figure>



<figure class="wp-block-image"><img loading="lazy" decoding="async" width="768" height="1024" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2019/08/IMG_20190813_193215-768x1024.jpg" alt="" class="wp-image-1904" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2019/08/IMG_20190813_193215-768x1024.jpg 768w, https://haranprasanna.in/wp-content/uploads/2019/08/IMG_20190813_193215-225x300.jpg 225w" sizes="auto, (max-width: 768px) 100vw, 768px" /></figure>



<figure class="wp-block-image"><img loading="lazy" decoding="async" width="768" height="1024" src="http://haranprasanna.in/blog/wp-content/uploads/2019/08/IMG_20190813_193225-768x1024.jpg" alt="" class="wp-image-1905" srcset="https://haranprasanna.in/wp-content/uploads/2019/08/IMG_20190813_193225-768x1024.jpg 768w, https://haranprasanna.in/wp-content/uploads/2019/08/IMG_20190813_193225-225x300.jpg 225w" sizes="auto, (max-width: 768px) 100vw, 768px" /></figure>



<p class="wp-block-paragraph">அப்துல்லாவின் இடுகைக்கு 400+ லைக்குகள், 50+ ஷேர்கள். எனவே இப்பதிவையும் அதற்கு இணையாக வைரலாக்குங்கள். இல்லையென்றால் வழக்கம்போல திமுகவின் பொய்களே வரலாறாகும். அவர்கள் சொன்னதை கம்யூனிஸ்ட்டுகள் பரப்புவார்கள். அதை திகவினர் பரப்புவார்கள். பின்பு அதையே திமுகவினர் ஆதாரமாகக் காட்டுவார்கள். நான்கு சோனகிரிகள் தொலைக்காட்சிகளில் பேசித் திரிவார்கள். இப்படித்தான் வரலாற்றில் அவர்கள் நிற்கிறார்கள்.</p>



<p class="wp-block-paragraph">பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்துல்லா. 🙂</p>



<p class="wp-block-paragraph">பின்குறிப்பு: பல நாள்களாகப் படிக்க நினைத்த புத்தகம். இதற்காகப் படிக்க ஆரம்பித்து நெருப்புப் போலப் பறக்கிறது. இதைத் தமிழில் கொண்டு வருபவர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள். அப்துல்லாக்கு நன்றி.&nbsp;🙂</p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2019%2F08%2F14%2Fisro-space-in-tamilnadu-scientist-nambi-narayanan-vikram-sarabhai-annadurai-and-drunkard-minister-mathiyazhagan%2F&#038;title=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%2C%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D" data-a2a-url="https://haranprasanna.in/2019/08/14/isro-space-in-tamilnadu-scientist-nambi-narayanan-vikram-sarabhai-annadurai-and-drunkard-minister-mathiyazhagan/" data-a2a-title="நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2019/08/14/isro-space-in-tamilnadu-scientist-nambi-narayanan-vikram-sarabhai-annadurai-and-drunkard-minister-mathiyazhagan/">நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1902</post-id>	</item>
		<item>
		<title>கிராம்னிக் தாக் சேவா 2019 &#8211; தமிழ்நாடு &#8211; 10% இட ஒதுக்கீடு</title>
		<link>https://haranprasanna.in/2019/07/31/gramnik-dak-seva-tamilnadu-ews/</link>
		
		<dc:creator><![CDATA[ஹரன் பிரசன்னா]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Jul 2019 05:32:53 +0000</pubDate>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[EWS]]></category>
		<category><![CDATA[இட ஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[இடஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<guid isPermaLink="false">http://haranprasanna.in/?p=1888</guid>

					<description><![CDATA[<p>தபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது. திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்களின் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப்</p>
<p>The post <a href="https://haranprasanna.in/2019/07/31/gramnik-dak-seva-tamilnadu-ews/">கிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p class="wp-block-paragraph">தபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன.  பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது.  திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்களின் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப் பதிவில் ஒரு சிறிய உண்மை உள்ளது. அதேசமயம் அதில் சொல்லப்படாத பல உண்மைகளும் உள்ளன. ஒரே ஒரு உண்மையை மட்டும் உரக்கச் சொல்வது, இரண்டாம் கருத்துக்கே இடமின்றி, 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைக்கூட நியாயப்படி எதிர்க்காமல், அவர்களுக்கே உரிய அநியாயப்படி, அதில் பயன்பெறப்போவது பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லி வருகிறார்கள். எவ்வித சலுகைகளும் இல்லாத அனைத்து முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இது பொருந்தும் என்பதை மறந்தும் இவர்கள் சொல்லமாட்டார்கள். இதில் பயன்பெறும் பிராமணரல்லாத சாதியினரின் பெயர்களைச் சொல்லிவிட்டால் இவர்கள் அரசியல் வேகாது என்பதுதான் காரணம்.</p>



<p class="wp-block-paragraph">கிராமின் தாக் சேவா ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல. இன்னும் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கை நிலுவையில்தான் உள்ளது. ஆனால் பதிவை சுற்ற விட்டவர்களும், உடனே சமூக நீதி செத்துப்போய்விட்டது என்று எள்ளும் நீரும் தெளித்தவர்களும், பிராமணர்களுக்கு அரசு வேலைன்னா கசக்குதா என்று கேட்டார்கள். இந்த கிராமின் தாக் சேவா ஊழியர்கள் கிராமப்புற ஊழியர்கள். தபால் துறையால் நேரடியாக முழு நேர அலுவலகமாகவோ துணை அலுவலகமாகவோ தொடங்க முடியாத இடங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது கிராமமாக, பட்டிக்காடாக, மக்கள் எளிதில் செல்லமுடியாத இடங்களாக இருக்கலாம். இவர்களது சம்பளம், மற்ற பொதுவான அரசு ஊழியர்களின் சம்பளத்தைவிடப் பலமடங்கு குறைவாக இருக்கும். இவர்கள் ஐந்து வருடம் இந்த வேலையில் இருந்து, பின்னர் தேர்வெழுதி தபால்துறைக்குள் வேலைக்கு வரலாம். அப்போது இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.</p>



<p class="wp-block-paragraph">கிராமின் தாக் சேவா ஊழியர்கள் வேலைக்கு மனு செய்யும்போதே அவர்களுக்குரிய இடத்துக்குத்தான் மனு செய்யமுடியும். அல்லது அவர்கள் எந்த இடத்துக்கு மனு செய்தார்களோ அந்த இடத்துக்கு மட்டுமே அவர்களது மனு பரிசீலிக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு மனு செய்தவர்கள், தகுதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், எது உள்ளூர்க்காரர்களுக்கான வேலைக்கு வசதியோ அதை ஒட்டியே இந்த வேலை என்பதுதான் இதன் அடிப்படையே. ஆனால் திமுகவினர் இதையும், உள்ளூர்ல வேலைன்னா கசக்குதா என்று ஒருவரியில் சொல்லிக்கொண்டார்கள்.</p>



<p class="wp-block-paragraph">கட் ஆஃப்: கட் ஆஃப் என்பது, போட்டியில் பங்கெடுத்தவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, காற்றில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பெண் அல்ல. ஒரு தேர்வில் பங்குகொண்டவர்களின் தரத்தைப் பொருத்தே இந்த கட் ஆஃப் அமையும். கட் ஆஃப் என்பதுதான் இறுதித் தேர்வு என்றால், இதற்குப் பின் நேர்முகத்தேர்வுகூடக் கிடையாது என்றால், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வாங்கும் அனைவருக்கும் வேலையோ மேற்படிப்போ கிடைத்துவிடும். உதாரணமாக, மிக மேம்போக்காகச் சொல்வதென்றால், 4000 பேர் தேர்வெழுதி, 400 பேர் மட்டுமே தேந்தெடுக்கப்படவேண்டும் என்றால், யார் 400வது குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களோ அதுவே கட் ஆஃப் என்று வைத்துக்கொள்ளலாம். இதையே ஒவ்வொரு இட ஒதுக்கீட்டின்படியும் செய்வார்கள். </p>



<p class="wp-block-paragraph">அம்மாபட்டினம் என்ற ஒரு கிராமத்தில் ஒருவர் 42 மதிப்பெண்கள் பெற்று EWS கோட்டாவில் வேலைக்கு வந்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?</p>



<p class="wp-block-paragraph">முதலில் வேலைக்கு மனு போடும்போதே இந்த இடத்தில் ஒரே ஒரு வேலைதான் என்றும், அது EWSக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலிலும் எந்த கோட்டாவில் வேலை என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இந்த ஊரில் EWS கோட்டாபடி எத்தனை பேர் வேலைக்கு மனு செய்திருந்தார்கள்? இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? அந்த விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்தால்தான் இதை மேற்கொண்டு பேசமுடியும்.</p>



<p class="wp-block-paragraph">இன்னும் சில ஊர்களில் 50 மதிப்பெண்களுக்கும் கீழான மதிப்பெண்கள் பெற்றவர்கள் EWS கோட்டாவில் வந்திருக்கிறார்கள். அந்த ஊர்களிலும் இதுவேதான் பிரச்சினை.</p>



<p class="wp-block-paragraph">EWS கோட்டாவின்படி இந்த ஆண்டே வேலைக்கு மனு செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிச்சயம் குறைவாகவே இருக்கமுடியும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், EWS கோட்டாவில் மனு செய்பவர்கள் அதிகரிக்கும்போது,  எஸ் சி எஸ் டி பிரிவுகளுக்கான கட் ஆஃப் மற்றும் EWS கோட்டாவின் கட் ஆஃப் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு மறையும். நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது.</p>



<p class="wp-block-paragraph">ஆனால் எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில், 42 மதிப்பெண்கள் பெற்ற ஐயரும் ஐயங்காரும் வேலைக்குப் போகிறார்கள் என்று சொல்வது எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்? அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால்! இதை எதையுமே இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.</p>



<p class="wp-block-paragraph">இதை ஒட்டி இதே பதிவுகளில் அவர்கள் சொல்லத் துவங்கியது, 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்பது. 69%ல் உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இவர்கள் இதை எப்படி ஒரு செய்தியாக உருவாக்கினார்கள்? 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா? அதைச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது EWS கோட்டாவுக்கு முன்பு எஸ் சி எஸ் டி பிரிவினருக்கான இடங்கள் எத்தனை கிடைக்கும், இப்போது எத்தனை கிடைக்கும் என்பதை மட்டும் சொல்லி, ஒரு மீம் ஆக்கி, அதைப் பரப்பினார்கள்.</p>



<p class="wp-block-paragraph">இப்படிப் பொய்ச் செய்திகளை, அரைகுறை உண்மைகளைப் பரப்புவது எளிதாக இருக்கிறது. அதற்கு தேவையான பதிலைச் சொல்வது பெரிய வேலையாக இருக்கிறது. 10% EWS கோட்டா என்பது, பொதுப்பிரிவில் உள்ள இடங்களுக்குள்ளே மட்டுமே. எவ்வகையிலும் ஏற்கெனவே மாநில மத்திய அரசுகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அது பாதிக்காது. இதை மத்திய அரசு தெளிவாகவே சொல்லி இருக்கிறது. ஆனாலும் திமுகவினர் இதை வேண்டுமென்றே ஒரு செய்தியாகப் பரப்புகிறார்கள். அதிலும் EWS கோட்டாவின்படி பலன் பெறப் போவது ஐயரும் ஐயங்காரும் என்று சொல்வதில் உள்ள வெக்கம்கெட்டத்தனம்தான் கேவலமாக இருக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">8 லட்சம் வருட வருமானம் என்பது நிச்சயம் கூடுதலான தொகைதான். இதை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்பதே என் தனிப்பட்ட எண்ணம். 2.5 லட்சமாக்கலாம் என்பது என் பரிந்துரை. ஆனால் இந்த 8 லட்சம் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பரிந்துரையில் தரப்பட்டிருக்கும் தொகை இது. அதையே, உண்மையில் நேர்மையாக, மத்திய அரசு EWS கோட்டாவுக்கும் வைத்துள்ளது. EWS கோட்டாவில் 8 லட்சம் அதிகம் என்று பேசுபவர்கள், க்ரீமி லேயர் பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.</p>



<p class="wp-block-paragraph">க்ரீமி லேயரையும் அறிமுகப்படுத்தி, EWS கோட்டாவின் வருட வருமானம் மற்றும் சொத்து மதிப்பையும் வரைமுறை செய்தால், இட ஒதுக்கீடும் EWS ஒதுக்கீடும் நிச்சயம் தேவையானவர்களைச் சென்றடையும். ஆனால் திமுகவினர் ஐயர் ஐயங்காருக்கு இட ஒதுக்கீடு என்றுதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். ஐயர் ஐயங்கார்தான் என்றாலும், அவர்களில் உண்மையான பொருளாதார நலிவில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் அவசியம்தான். இதையும் உள்ளடக்கியதுதான் உண்மையான சமூக நீதி. 99% வாங்கிய பிராமணருக்கு வேலை இல்லை, ஆனால் 94% வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை கிடைக்கும் என்பதில் உள்ள நியாயத்தை இந்த EWS கோட்டா கொஞ்சமாவது சமன் செய்யும். உண்மையான சமூக நீதியைப் பேசுபவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.</p>



<p class="wp-block-paragraph">ஒரு பிரச்சினையில் மிகச் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் பாஜகதான் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். ஒரு பொய்க்கருத்தை திமுக பரப்புகிறது என்றால், அதை உடனே சரியான வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அதிலுள்ள தவறைக் குறிப்பிட்டு சொல்லிப் பரப்பும் செயலை தமிழக பாஜகதான் மேற்கொள்ளவேண்டும். ஒரு பொய் லட்சம் பேர்களால் பரப்பப்படுகிறது. அதற்கான உண்மை என்பதைக் கண்டறிய தனியாளால் முடியாது. பாஜகவினர் இதைச் செய்யலாம். ஆனால் பாஜகவினர் கருத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தவர்களாகவும் அதை ஒப்புக்கொள்பவர்களாகவுமே நடந்துகொள்கிறார்கள். இதை முதலில் மாற்றவேண்டும். அப்போதுதான் உண்மையான கருத்து என்ன என்பது பரவத் துவங்கும். </p>



<ul class="wp-block-list"><li>ஹரன் பிரசன்னா</li><li></li></ul>



<p class="wp-block-paragraph">தொடர்புடைய ஃபேஸ்புக் பக்கம்:  <br><a href="https://www.facebook.com/pudugai.abdulla/posts/10215186778051424">https://www.facebook.com/pudugai.abdulla/posts/10215186778051424</a> </p>
<p><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fharanprasanna.in%2F2019%2F07%2F31%2Fgramnik-dak-seva-tamilnadu-ews%2F&#038;title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%202019%20%E2%80%93%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E2%80%93%2010%25%20%E0%AE%87%E0%AE%9F%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81" data-a2a-url="https://haranprasanna.in/2019/07/31/gramnik-dak-seva-tamilnadu-ews/" data-a2a-title="கிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு"><img src="https://static.addtoany.com/buttons/share_save_171_16.png" alt="Share"></a></p><p>The post <a href="https://haranprasanna.in/2019/07/31/gramnik-dak-seva-tamilnadu-ews/">கிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு</a> first appeared on <a href="https://haranprasanna.in">ஹரன் பிரசன்னா</a>.</p>]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1888</post-id>	</item>
	</channel>
</rss>
